Wednesday 23 August 2017

பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்ற விவாதம்

பிள்ளையாரை போட்டுடைத்த பெரியார்: நீதிமன்றத்தில் சுவையான விவாதம்!

பெரியார் பிள்ளையாரை போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்…

நீதிபதி (கைது செய்த காவலரிடம்): இவர் என்ன குற்றம் செய்தார்?

காவலர்: இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்.

நீதிபதி (பெரியாரிடம்): பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?

பெரியார்: ஆமாம், போட்டுடைத்தேன்.

நீதிபதி: ஏன் அப்படிச் செய்தீர்கள்?

பெரியார்: கடைவீதிக்குப் போனேன். அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன். யாருக்கும் இடையூறு இல்லாமல், தெரு ஓரமாகப் போட்டுடைத்தேன்.

நீதிபதி: ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதைப் புண்படுத்தாதா? அது தவறல்லவா?

பெரியார்: நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்.

நீதிபதி (காவலரிடம்): மற்றவர்கள் என்ன செய்தார்கள்?

காவலர்: அவர்களும் போட்டுடைத்தார்கள்.

நீதிபதி: அவர்களை ஏன் கைது செய்யவில்லை?

காவலர்: அவர்கள் “கடவுள் உண்டு” என்று சொல்லி உடைத்தார்கள். ஆனால் இவரோ, “கடவுள் இல்லவே இல்லை” என்று சொல்லி உடைத்தார்.

நீதிபதி: இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? “கடவுள் இல்லை” என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு. “கடவுள் உண்டு” என்று சொல்பவர், அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? (பெரியாரை பார்த்து) அய்யா, நீங்கள் போகலாம்.

பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார் - 7.5.1953

பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்

பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டியதில்லை.பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.
நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன்.

இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல்லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.


(7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை)

பிள்ளையார் - சித்திரபுத்திரன் - 26.08.1928

பிள்ளையார் 


இந்து மதம் என்பதில் உள்ள கடவுகளின் எண்ணிக்கை ”எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது,” என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டு இருப்பதும், அத்தனைக் கடவுளுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு – முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை. அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பொருமானமுள்ள நேரங்களும், பலகோடி பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்ககூடிய காரியமல்ல.

பெரியார்இக்கடவுள்களின் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புகொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.”இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், பிள்ளையார் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.”

நிற்க. இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தாங்களுடைய எந்த காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புகொள்ள கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.

ஏனெனில், கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதற் கடவுளைப்பற்றி தெரிந்துகொள்வதுதான் நன்மையானதாகும், தவிர, முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி என்பதாக தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம்.

ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுளின் கதைகளைப் பற்றி விளக்கப்போவதில் முதல் கடவுள்பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால், “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்”. அன்றியும் சமீபத்தில் அக்கடவுளில் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்.

பிள்ளையார் பிறப்பு

அழுக்கு விநாயகர் சதுர்த்தி

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழேபோட்டதும் அது ஆண் குழந்தையாகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து – “நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருசனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக்கொண்டு இருப்பதால் உள்ளேப் போகக்கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கும் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்கு போனதாகவும், பார்வதி சிவனைப்பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கிய குழந்தை வெட்டுண்டதற்காக புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்தது, பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது, இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் – பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டு கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்று இருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாக புகுந்து அக்கருசிசுவின் தலையை வெட்டிவிட்டதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகிறது, இது தக்காயகபரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறதாம்.

இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப்பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளை பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

பிள்ளையார் விசர்ஜன்:

பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும். எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படி பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்ததால், மற்றக் கடவுள்கள் சங்கதிபற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க.

ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்த தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளை பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புகொள்ள முடியும்? ஆகவே, இந்த கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. இதனை பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் ”கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும்  “அது ஒரு சக்தி” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களை கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம், சிதம்பரம் கோயிலில் யானை முகம்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாக செய்திருப்பதுடன், இந்த காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது, பல ஆண் – பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகிறார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் குறியில் புகுத்தி அப்பெண்ணை தூக்கிகொண்டு இருப்பது போலவும், அந்த பெண் காலை அகட்டியவாறே அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்ற ஒரு கடவுள் யுத்தம் செய்ததாகவும்,அந்த யுத்தத்தில் அசுரர்களை எல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவுக்கு அசுரர்கள் (“வல்லபை”) என்னும் அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டு வருவது போல பல லட்ச்சக்கணக்கான அசுரர்கள் வந்துகொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், தனது தும்பிக்கையை அந்த அசுரப் பெண்ணின் பெண்குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் அப்படியே ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாக சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரி காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவைகளை எல்லாம் கடவுள் என்று சொல்லும் ”ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

”எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதிவிட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினம் அவ்வெழுத்துகொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா?அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாக தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்வதனால், இவைகளுக்கு தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்காமல் நின்றுவிட்டதா? யோசித்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுளுக்கு ஆபத்து” என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றை எல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் ஆராய்ச்சி குறைவதில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாச சங்கங்களை எல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுள்களையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.

இனி அடுத்தமுறை அடுத்த கடவுளை பற்றி கவனிப்போம்.

–   சித்திர புத்திரன்
(குடியரசு – கட்டுரை – 26.08.1928)