Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Thursday, 16 November 2017

சட்டத்தைக் கொளுத்துங்கள்! - 16.11.1957

சட்டத்தைக் கொளுத்துங்கள்!


சட்டத்தைக் கொளுத்துங்கள்!

சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்!!

சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன்மூலம், அரசாங்கத்தினர் ‘சாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்’ என நமக்குச் சவால்விட்டு இருக்கின்றனர்.

இந்தச் சவாலுக்கு, நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?

சட்டம் கொளுத்திச் சாம்பலைச் சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளட்டும்!

 ‘விடுதலை’ 16.11.1957

நான் எதற்காகச் சிறை செல்கிறேன்? - 09-11-1957


நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?
கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்!
சிறை சென்றேன்! சர்க்கார் கண் விழிக்கவில்ல. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ? எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண் டாமா?
‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’ என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

–  விடுதலை 09-11-1957