Friday 29 September 2017

சரஸ்வதி பூசை அறிவுக்கொவ்வாமுறை - 13.10.1950

சரஸ்வதி பூசை அறிவுக்கொவ்வாமுறை


சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு,நாம். அந்தசாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி யெனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.


சரஸ்வதி உற்பவக்கதை

அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரமனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவளுடைய அழகைக்கண்டு அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக்கதை சொல்கிறது.

அதாவது பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்து, போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இல்லாமல் இருக்கின்றது.

ஆயுதத்தை வைத்து பூசை செய்து வந்த, நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்து பூசை செய்தேயறியாத வெள்ளையன் துப்பாக்கி முனை கண்டிடவில்லையா?

சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்புநிறை நிறுக்காமலோ, குறைஅளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதுபோலவே, கைத் தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகுபக்தியாய் அவைகளை சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து போட்டுவிழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாக தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்வதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.

அதுபோலவே, புத்தகங்களையும், பென்சிலையும் கிழிந்த காகிதக் குப்பைகளையும் வைத்து சந்தனப் பொட்டு இட்டு பூசை செய்கிறார்களே அல்லாமல், காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களேயல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூசை செய்தும், சரஸ்வதி பூசை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குக் குடிபோகின்றார்கள்?

அது நிற்க, வருடா வருடம் சரஸ்வதி பூசை செய்துவரும் நம் நாட்டில், நம் மக்களில் 5 பேர்களே படித்திருக்கிறார்கள். அதிலும், சரஸ்வதியின் இனத்தைச் சேர்ந்த பெண்களில் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள். இதன் காரணமென்ன?

நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் பிரமனால் உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு, அந்த பிரமராலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவள் பிரமனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு வெடுத்து ஓடவும், பிரமன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின்தொடர்ந்து ஓடவும் சிவன் வேடன் உருவெடுத்து ஆண்மானைக் கொல் லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவ பிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து பிரமனுக்கு மனைவியாக சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்ப வக்கதை பெற்றெடுத்த தன் தகப் பனையே மணந்து கொண்டவள் ஆகிறது.

மற்றொரு கதை சரஸ்வதியின் உற்பவத்தை குறித்து மற்றொரு கதையின்படி சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறது அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வ தியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ் வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.

எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் பார்ப்பன புராணப்படி மிக்க ஆபாசமும் ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு சரஸ்வதி பூசை என்றும் ஆயுத பூசை என்றும் ஒரு நாளைக் குறித்துவைத்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி வைத்துப் பூசை செய்கிறார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திர சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகள் சேலை களையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இலட்சியத்துக்குப் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூசை செய்கிறார்கள்.

இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய், பூஜை, ஓய்வு முதலிய ஆடம் பரங்களுக்காக விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள்? நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விசயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என் கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்த மட்டில் இவை சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கிற எண்ணமோ அறவே இல்லை.

அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டு, கண்ணில் ஒத்திக் கொண்டும் வருகிறோம். நமக்கு கல்வி இல்லை ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும் அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண் கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்கு மானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்திவாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதை யோசித்துப்பாருங்கள்.

யுத்த ஆயுதம் கைத்தொழில் ஆயுதம் வியாபார ஆயுதம் ஆகியவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால், அதை பூசை செய்யும் நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும் வியாபாரமற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாதும் சரஸ்வதி பூசை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டு மிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்தரத்துடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள்.

இந்த பூசையின் மூலம் நமது முட் டாள் தனம் எவ்வளவு வெளியா கின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி சுண்டல் வடை, மேளவாத்தியம், பார்ப்பனர்களுக்கு தட்சனை சமாராதனை, ஊர்விட்டு ஊர்போய் ரயில் சார்ஜ் ஆகிய இவை எவ்வளவு செலவாகிறது.

இவை எல்லாம் யார் வீட்டுப் பணமா? நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்கு பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவ புராணிய அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொரு ளாதார இந்திய தேசீய நிபுணரும் கணக்குப்பார்த்ததே இல்லை.

தந்தைபெரியார் - “விடுதலை” 13.10.1950

சரஸ்வதி பூஜை என்பது என்ன? - தந்தை பெரியார் - - 20.10.1929

சரஸ்வதி பூஜை என்பது என்ன? - தந்தை பெரியார்


சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.  அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது  ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால்  வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில்  ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து  பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில்  வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது  அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக்  கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும்  சரஸ்வதியாய் கருதி தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு  நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு  செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு  தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 "குடிஅரசு" இதழில் வெளியானது.

Monday 18 September 2017

RSS-ஐ தமிழ்நாட் டிற்குள் நுழைய விடாமல் வாசற்படியிலேயே அடித்துக்கொல்ல வேண்டும்.

உஷார் !உஷார்!! உஷார்!!! பார்ப்பனர்களின் புதிய தந்திரம்

இந்தியாவின் நன்மையின் பொருட்டும் மக்களின் சம உரிமையின் பொருட்டும் மகாத்மா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் கொண்ட ஒத்துழையாமையை காங்கிரசின் மூலம் நடத்தப்பட்டு வந்த காலத்தில் நாட்டில் சுயநலம் படைத்த பார்ப்பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் தவிர மற்றவர்களுக்குள் ஒற்றுமையும் நம்பிக்கையும் கூடிய வரையில் கட்டுப்பாடும் இருந்து வந்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அதற்கு முன் இருந்து வந்த வகுப்பு உணர்ச்சி களுக்கும், வகுப்புத் தந்திரங்களுக்குங்கூட பலம் குறைந்திருந்தது என்பதை யும் யாரும் மறுக்க மாட்டார்கள்.

அவ்விதமிருந்த தேசத்தை, அது முன்னேறி நிர்மாணத் திட்டமும் பகிஷ்காரத் திட்டமும் வெற்றி பெற்று மக்கள் சமத்துவமும் சுதந்திரமும் அடைந்து விட்டால் ‘வாழ முடியாத’ வகுப்பார்களாகிய வஞ்சகப் பார்ப் பனர்களும் ஆங்கிலம் படித்த அடிமைகளும் இவற்றை எதிர்த்துப் பலவித சூழ்ச்சிகளால் கூடவே இருந்து குடியைக் கெடுத்து தேசத்தின் மக்களை பழய படி உயர்வு தாழ்வு வித்தியாசத்திலும் அடிமை வாழ்வில் பிழைக்க வேண் டிய அவசியத்திலும் கொண்டுவந்து விட்டு விட்டார்கள். இதன் பலனாய் இப்போது தேசத்தில் எங்கு பார்த்தாலும் பழயபடி வகுப்பு உணர்ச்சிகள் பெருகி, ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் சுயமரியாதையையே சுதந் திரம் என்பதாகக் கொண்டு, தங்கள் தங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடு கிறார்கள். இப்படிப் பாடுபடுவதானது சாது ஜனங்களை ஏமாற்றி ஏற்கனவே பல சுதந்திரங்களும் சௌகரியங்களிலும் செய்து வைத்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களுக்கு தங்கள் அதிகாரமும் அதிக சுதந்திரமும் போய்விடுமே என்கிற கவலை ஏற்பட்டு, பொதுமக்கள் அடையும் சமத்துவத்திற்கும் முற் போக்கிற்கும் முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டியது. (நமது பார்ப்பனர் களின் வேதக் கடமையாய்ப் போய்விட்டது. இதற்காக ஆங்காங்குள்ள பார்ப்பனர்கள் ஒன்று கூடி எவ்வளவோ சூழ்ச்சிகளும் பகீரதப் பிரயத் தனங்களும் செய்து பார்க்கிறார்கள். உதாரணமாக வர்ணாசிரம சபை, இந்து மகாசபை, சங்கதன் சுத்தி, சுயராஜ்யக் கக்ஷி, பெங்கால் பேக்ட், இந்தி பாஷை, இரட்டை ஆக்ஷியை ஒழித்தல் ஆகிய இவ்வளவு இயக்கங்களும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் ஆங்கிலம் படித்த ஒரு சிலர் வயிறு வளர்க் கவும் பொதுமக்கள் சமத்துவமும் சுயமரியாதையும் பெறுவதையும் பிற்பட்ட வர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை பெற்று முன்னேறுவதைத் தடுக்கவும், முட்டுக்கட்டை போடவுமே ஏற்படுத் திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வர வர பாமர ஜனங்கள் இவைகளை உணர்ந்து, இப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி வலையில் சிக்காமலும், சிக்கினவர்களும் சூழ்ச்சியறிந்து வெளிவருவதாலும் நமது பார்ப்பனர்களுக்கு இதுவரையில் ஏற்பட்டிருந்த கவலையை விட இப்போது கொஞ்சம் அதிகமான கவலை ஏற்பட்டு இதற்கு வழி தேடுகிறார்கள். தற்காலம் நமது நாட்டில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் எவ்வித ஸ்தாபனங்களுக்கும் பாமர ஜனங்களிடையில் மதிப்பில்லாமல் போய் விட்டபடியால், புதிதாய் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி அதன் மூலம் ஜனங்களை மயக்க நமது பார்ப்பனர்கள் புதியதொரு தந்திரம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அது என்ன வென்றால், “தேசீய ஒற்றுமைச் சங்கம்” என்பதாக ஒன்றைப் புதிதாகத் தாங்களே சிருஷ்டித்து அதில் இரண்டொரு ராஜீய விளம்பரக்காரர்களிடம் கையெழுத்து வாங்கி தாங்களும் கையெழுத்திட்டு இன்னும் பல சுயநலத்திற்காக எதையும் தியாகம் செய்யத்தக்க “தியாக புருஷர்களின்?” கையெழுத்தையும் வாங்கப் போகிறார்கள்.

இந்து மகாசபை போலவே இச்சங்கத்தை ஒவ்வொரு ஊரிலும் ஸ்தா பிப்பார்கள். அதில் வகுப்பு நலன் நாடுபவர்கள் யாவரும் சேர்த்துக் கொள் ளப் படமாட்டார்களாம். இது ஒரு புதிய தந்திரமென்றே சொல்லுவோம்.

தமிழ்நாடு சார்பாய், ஸ்ரீமான்கள் சீனிவாச சாஸ்திரிகளும் சீனிவாசய் யங்காரும் கையெழுத்திட்டிருக்கிறார்களாம். இந்த இரண்டு பெரியார்களும் வகுப்பு உணர்ச்சியே இல்லாதவர்கள் போலும்! சமத்துவமே ஒரு உருவாய் வந்தவர்கள் போலும்! இருவர்களும் மகாத்மாவையும் ஒத்துழையாமையை யும் ஒழித்ததற்குக் கொஞ்சங் குறைய முழுப் பொறுப்பாளிகள். பண்டித மாள வியா அவர்களும் இதில் சேர்ந்து விட்டால் மூவரும் முழுப் பொறுப் பாளிகளாய் விடுவார்கள்.

இந்த சிகாமணிகள் தேச நன்மைக்குப் பாடுபடுகிறவர்களாம். இந்தியா வின் முட்டாள் தனத்தாலும், அடிமைத் தனத்தாலும் அன்னியர்க ளுக்கு ஒற்றர்களாயிருப்பதாலுமே வாழ வேண்டிய இந்த “பிரபுக்கள்” – இந்தியா சமத்துவமும் சுதந்திரமும் அடைந்த உடன் இந்த நாட்டை விட்டு ஓடவோ அல்லது இந்தியாவிற்கு வேற்றரசரைக் கூட்டி வரவோ வேண்டிய அவசிய முள்ள இந்த ‘வீரர்கள்’ இந்தியாவின் நன்மையை நாடுவதற்கு எப்படி அருகர் களாவார்கள்? இவர்கள் எப்படி நம்முடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உடையவர்கள் ஆவார்கள்? ராஜீய – மத – வகுப்பு உணர்ச்சி உள்ளவர்களே இதில் சேரக்கூடாது என்று சொல்லி ஒரு சங்கம் ஸ்தாபித்தால், அதில் யார் போய்ச் சேரக்கூடும்? ராஜ்ஜியத்தை அன்னியனுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கிறவனும், மதம் இல்லாத வனும், தான் எந்த வகுப்பு என்று தெரிந்து கொள்ள முடியாதவனும் அல்லா மல் வேறு யாராவது இந்த சங்கத்தில் சேரக்கூடுமா என்பது நமக்கு விளங்க வில்லை. மனிதனாய்ப் பிறந்த ஒருவன் தனது தேசாபிமானம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? அது போலவே தனது மதாபிமானமும் குலாபி மானமும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இம் மூன்றையும் விட்டுவிட்டு இப்பார்ப்பனர்களிடம் வந்து ஒருவன் அனுபவிக்கப் போகிற லாபம் என்ன? இச்சங்கம் என்பது தற்காலம் ஒவ்வொரு மதஸ்தர்களுக்கும் ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஏற்பட்டிருக்கும் சுயமரியாதை உணர்ச்சியைக் கொல்ல ஏற் பட்ட சங்கமே அல்லாமல் வேறல்லவென்றே கூறுவோம். ஆதலால் நமது முஸ்லீம் சகோதரர்களே! கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனரல்லாத இந்து சகோதரர்களே! இம் மாய்கையில் சிக்கிக் கொள்ளாமல் உஷாராயிருக்க வேண்டும் . இந்து மகாசபையை எப்படித் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் மண்டையிலடித்து ஒழித்தோமோ, அதுபோலவே இத் தேசீய ஐக்கியச் சங்கம் என்னும் பார்ப்பன அயோக்கியச் சங்கத்தைத் தமிழ்நாட் டிற்குள் நுழைய விடாமல் வாசற்படியிலேயே அடித்துக்கொல்ல வேண்டும்.

இது சமயம் தமிழ் மக்களின் தலையெழுத்து எவ்வளவு மானக் கேடானதாகவும் இழிவானதாகவும் இருக்கிறது என்பதை சற்று நிதானமாய்க் கவனித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் யார்? ஸ்ரீமான்களான எஸ். சத்திய மூர்த்தி அய்யர்,எ. ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே.ஆச்சாரியார், எஸ்.சீனி வாசய்யங் கார், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரிகள் முதலிய பார்ப்பனர்களே. இவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் பிறப்பு என்ன? இவர் கள் ஒழுக்கம் என்ன? இவர்கள் வளர்ப்பு என்ன? இவர்கள் ஜீவனம் என்ன? எந்த வகையில் இப்பொழுது மனிதர்களாய் வாழ்கிறார்கள்? என்ன எண் ணத்தின்மேல் நமக்கு இவர்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளு கிறார்கள்? நமக்குத் தலைவர்களாய் இருக்க இவர்களுக்கு என்ன பாத்திய தையும் யோக்கியதையும் இருக்கிறது? பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளையானது போல் நமது நாட்டைக் காட்டிக் கொடுத்ததல்லாமல், அரசையும் போக போக்கியத்தையும் பாழாக்கியதல்லாமல் நமது சுயமரியா தையை அடியோடு துலைத்ததல்லாமல், நமக்குள் ஒற்றுமைக்கே மார்க்கமில் லாமல் செய்ததோடல்லாமல், நம்மைத் தாழ்ந்தவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் கண்ணில் பார்க்கக் கூடாதவர்கள் , கூடப் பேசக் கூடாதவர்கள், சுவாமியினிடம் போகக் கூடாதவர்கள், கோயிலுக்குள் நுழையக் கூடாதவர் கள், தீண்டப்படாதவர்கள், தாசி மக்கள், வேசி மக்கள், தங்கள் வைப்பாட்டி மக்கள், சண்டாளர்கள் என இப்படிப் பல மாதிரியாக ஆக்கி வைத்துக் கொண்டதோடல்லாமல் இன்னமும் நம்மைக் கெடுத்து ‘நமது இரத்தத்தை’ உறிஞ்சிக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் கொஞ்சமேனும் அச்சமும் நாணமும் இல்லாமல் இனியும் நமக்குத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளவும் நாம் இவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் இருப்பதென்றால், நமக்கு அறிவு உணர்ச்சி ஆண்மை ரத்தம் இருக்கிறதா என்றுதான் கேட்கி றோம். ஆதலால் இந்து முஸ்லீம் கிறிஸ்துவ சகோதரர்களே! பார்ப்பனப் பூண்டு கலந்த எந்தச் சங்க மானாலும் எந்த ஸ்தாபனமானாலும் அதைத் திரும்பிக்கூடப் பார்க்காதீர்கள் ! மோக்ஷமானாலும் சரி நரகமானாலும் சரி, உங்கள் காலைக் கொண்டு நீங்கள் நில்லுங்கள். உங்களிடம் பார்ப்பனர்கள் உங்களை தங்களோடு சேரும் படிக்கோ அல்லது தங்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளும் படிக்கோ வந்து கேட்பார்களேயானால் முதலாவதாக இந்து மகாசபையையும் வர்ணா சிரம சபையையும் ஒழித்துக் கதவடைத்து விட்டு வரச் சொல்லுங்கள்! தாங்கள் கடவுளின் முகத்திலிருந்து பிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், நாம் அவர்கள் வைப்பாட்டி மக்கள், தாழ்ந்தவர்கள், அடிமைகள் என்று சொல்லும் சாஸ்திரங்களையும் ஆதாரங்களையும் நெருப்பில் போட்டுப் பொசுக்கி சாம்பலாக்கி விட்டு வரச் சொல்லுங்கள்! அதை யாராவது இனிமேல் வைத்திருந்தால் அவர்களைக் கழுவிலேற் றுவது என்றும் தூக்கில் போடுவது என்றும் சட்டம் செய்து கொண்டு வரும் படி சொல்லுங்கள்! ஒரு காலத்தில் அவர்கள் நம்மை இப்படிச் செய்துதான், அதாவது நம்முடைய பழைய ஆதாரங்களையும் நமது பெருமைகளையும் கூறும் நூல்களைப் பொசுக்கி அவர்களுக்கு சாதகமாகப் பலவித சட்டங் களைச் செய்து நம்மை இவ்விழிந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டு தாங் கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லும்படி செய்து கொண்டார்கள். நாம் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நாம் கேட்பது என்ன? சமத்துவமாக இருக்கச் சொல்லுகிறோம். “நீயும் சரி நானும் சரி, இருவ ருக்கும் சம உரிமை உண்டு” என்றுதான் சொல்லும்படி கேட்கிறோம். இந்து முஸ்லீம் கிறிஸ்துவ சகோதரர்களே! நல்ல சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள்! பார்ப்பனரின் பசப்பு வார்த்தையில் ஏமாந்து விடாதீர்கள்! உங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இத்தருணம் தப்பினால் இனி எத்தருணமும் வாய்க்காது! இதுதான் சமயம்! மகாத்மா காந்தியை நினையுங்கள்! மறுபடியும் அவரை உங்களது தலைவராயிருந்து இழிதன்மையையும் தாழ்மை நிலைமையையும் அடிமைத்தனத்தையும் போக்கிச் சுயமரியாதையையும் சமத்துவத்தையும் விடுதலையையும் சம்பாதித்துக் கொடுக்கச் சொல்லுங்கள்! இவைகளுக்காக உங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறோம் என்று உங்கள் சுத்தமான இரத்தத்தினால் பேனாவைத் துவைத்து உறுதி மொழிக் கையெழுத்திட்ட விண்ணப்பம் அனுப்புங்கள்! வருவார்! வருவார்!! வருவார்!!! வந்து வினை தீர்ப்பார்!!!!

குடி அரசு – தலையங்கம் – 15.08.1926

Sunday 17 September 2017

தந்தை பெரியார் 95-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 95-வது பிறந்தநாள் செய்தி


எனது பிறந்தநாள் செய்தி
எனது 95ம் ஆண்டு பிறந்தநாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டி யிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன். அப்படி எழுதப்படும் இக்கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம் . ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும்.
ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களாகவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக்கொண்டே இப்படி எழுதுகிறேன்.
நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்

இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாக இருக்கும் வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானாக இருக்கும்படியாக இருந்தாலும் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருவபவனாக இருந்தாலும் சூத்திரர்களாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும்.
இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைப் திருத்தவோ மற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத
நிலையில் இருக்கிறோம். அதுமாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விலக்கிக்கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான-நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இம்முயற்சியில் நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயே தான் இந்தப்படி எழுதுகிறேன்.

உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபடவேண்டும்

நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழிதன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா ?
இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தான் இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ்துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசிமக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.
நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க கருதுபவர்களாவார்கள்.
ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்தியக் கூட்டாச்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம்முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது. ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாச்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சி தான் அது விரும்புகிறது.
மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது.

இந்து என்றால் சட்டப்படியான விளக்கம்
இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக் கொண்டபடியிருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னமி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில்தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?
இதை அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களைக் மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால்கிறிஸ்துவர்கள்-முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் ஆவார்கள்இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை

நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தானட கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள்-இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில்தான் முக்கியகவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்று பயப்படு கிறார்கள், 50 வருட காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு-பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜிக்கு ஆர்டர்

எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன்வர வேண்டியது ஒவவொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்
என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். புதினாயிரக் கணக்கில் பாட்ஜிக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக)லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே ! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே !மாணவிகளே ! 

உறுதி கொள்ளுங்கள் !

உறுதி கொள்ளுங்கள் !!
உறுதி கொள்ளுங்கள் !!!.

ஈவெராமசாமி

தந்தை பெரியார் 94-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 94-வது பிறந்தநாள் செய்தி


பிறந்தநாள் செய்தி
எனக்கு (நான் பிறந்த) நாளது செப்டம்பர் மாதம் 17-ம்
தேதியோடு, 93 ஆண்டு முடிவடைந்து, 94-ம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது.
93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 16 மாதங்கள், நாட்களில் 34045 நாட்கள் பிறைகளில் (அமாவாசைகளும்) 1635 ஏற்பட்டு மறைந்துவிட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மான தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமே.
நினைத்தேன் - சொன்னேன் - நடத்திக்காட்டினேன்.
என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திர, முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்ல பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாததுமான காரியத்தை, எளியதாக நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி (பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்ததோடு, ஒரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி விளங்கும்படி, ஒரளவுக்கு நடத்திக்காட்டியும் வந்திருக்கின்றேன்.
இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணங் கொண்டு அதற்காக வாழ்கிறேன், என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தெய்வசக்தி-தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை , அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாயக் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கின்றேன் -வருகிறேன்.
மக்களுக்கு எந்த கெடுதியும் ஏற்படவில்லையே
இந்த எனத நிலையில், எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும் சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோ கூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லா காரியங்களிலும், மற்றவர்கள் எளிதில் பெறமுடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன் , மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.
இதனால் உலகக்கு-மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டுவருகின்றன என்றே சொல்லலாம்.
நோயும் சாவும் மட்டும் ஏராளம்

நமது கருத்து வெளியீடும் பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில்
, நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள் அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100க்கு 90 பேர் சாவார்கள் , பிளேக் வந்தால் 100க்கு 100ம் சாவார்கள். இருமல் (கீயம்) வந்தால் 100க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.
அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும் முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான்-அடிமைத் தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்தநிலை 10லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ  கீழ் நிலைக்கு ஆளாகியிருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப்படாமலும் கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.
எல்லாம் கடவுள் செயல் நம்மால் ஆவதில்லை
இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல் -இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல்எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லைஎன்று கருதி, நிம்மியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும் இதுவரை சிந்திக்காததும்தான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்கு புது எண்ணங்களை-அறிவை உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.
கடவுள்,மதம்,சாஸ்திர,முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும் ஒழிக்கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது , எப்படி வந்தது என்றால் மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல் , தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா ? பகுத்திறவு, சிந்தனை அற்ற காலம் , வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.
எவ்வளவு காட்டுமிராண்டியாக இருந்திருப்பார்கள் ?
சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மத சம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பகத விஜயம், திருவிளையாடல் புரணாம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த்தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.
மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில் 100க்கு 80க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர்,வித்துவான், மகாமகோதபாத்தியாய பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பெற்ற பெரிய படிப்பபாளி, அறிவாளி என்பவர்களெல்லாம் கூட நம்பி. அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப்பதும், அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகியவைகளை ஏற்படுத்தி பரப்பி, கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏமாற்றப்பட்டவர்களாக, காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க மாட்டார்கள் ?

ஈ.வெ.ராமசாமி

தந்தை பெரியார் 93-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 93-வது பிறந்தநாள் செய்தி


பிறந்த நாள் விண்ணப்பம்
எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நணபர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்தநாள் மலருக்கு சேதி கொடுத்துக் கொண்டு தான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்தநாள் என்பது எனது பிராசாரத்திற்கு ஒரு சாதனமாக ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு நல்ல சேதியாகும்.
நான் ஒரு சமத்துவத் தொண்டன்
நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபவன், ஜாதி அமைப்பு என்பதுகடவுள், மதம்மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகின்றேன். மக்களோ பெரும்பாலும் கடவள் நம்பிக்கை உடையவராக ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவைள சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்பகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னை சும்மா விட்டுக்கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.
கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா ?
நானோ எனது பிரசாரத்தில், கடவளே இல்லை என்று சொல்வதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி செய்கையாலும் காட்டிக்கொண்டே, நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில், எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படிகடவுளை செருப்பால் அடிக்கும்படிநான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.
இந்த நிலையில் எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால் கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா ? விட்டுக்கொண்டு இருப்பானா என்று, எந்தஎப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும் கடவுளாவது வெங்காயமாவது என்று கருதி, ஒரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிராசாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.
மக்களிடையே மாறுதல்
சென்ற எனது 92-ம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய பிறந்தநாள் செய்தியில்எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனசலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல் மக்களை காண்கிறேன்.
கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடைய பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் அவாவிற்கும் காரணமாகும்
சலிப்பை நீக்கிய ஆட்சி
இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டுநான் ஏன் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்றுஎன்று எழுதி சலிப்படைந்து இருக்கின்றேன். இந்த சலிப்பைக்கண்டு காலஞ்சென்ற மாண்பு மிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராஜர் அவர்களும் எனக்கு ஆறதல் எழுதி உற்சாக மூட்டினார்கள்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான் நான் உண்மையிலேயே நன்னம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

சாதி முறையின் மூலபலம்
?

     உண்மையில் எனது தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும்
, அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரசாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக உள்ளது.
ஏன் எனில், ஜாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.
இப்போதும் சொல்லுவேன் : நாகரிகத்திற்காக சிலர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்து ஜாதியை நிலைநிறுத்துவது தான், ஜாதியை ஒழியாமல் பாதுகாப்பது தான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.
உண்மையில் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பது தான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டு தான் இப்படிச் சொல்லுகின்றேன்.
ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பு இல்லை
அதாவதுகடவுளை செருப்பால் அடித்ததாக” 10 லட்சக்கணக்காக பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய ஜாதி துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடபட்டு 230 இடங்களில் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க) வெற்றிபெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திகள் நான் கொண்ட கருத்து அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.
இனி, நமது ஜாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டடது.
எனது திட்டம்
இந்த நிலையில், நான் நமது மக்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும்.
மற்றும் நான் நினைக்கின்றேன் - அண்மையில் ஒர் மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகின்றவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசணை கேட்டு காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்.

ஈ.வெ.ராமசாமி

தந்தை பெரியார் 92-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 92-வது பிறந்தநாள் செய்தி


பிறந்த நாள் செய்தி
எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது.
17-9-70வது நாள் முதல் 92 வது ஆண்டு துவங்குகிறது.


91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் போல் எனக்குத் தோன்றுகிறது. மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்கு பவர்கள் போல் மக்களை காண்கிறேன்.


மேலும் மாறுதடையுங்கள்
அதாவது கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடைய பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இரந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவுக்கும் காரணமாகும்.
இந்த நிலையில் நான் எனது 92வது பிறந்த நாள் சார்பாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுவதெல்லாம் மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும்.
நான் இந்த நிலை அடைந்ததற்கும், மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காணரம் இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து வரும் ஆட்சியேயாகும்.
பார்ப்பன சூழ்ச்சி தவிடுபொடி ஆயின
நமது நாட்டு ஆட்சியானது பகுத்திறவு ஆட்சி என்பதோடு, எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டி ருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத் தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.
இவற்றை ஏன் பெருமையாக குறிப்பிடுகிறேனென்றால் பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள் , எதிர்க்கட்சிகள் ‘தங்கள் சமுதாயத்திற்கு ஆபத்து வந்துவிட்டது” என்று கருதி பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த, செய்து வருகிற இமாலய் பிரயத்தனங்களை தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பது தான்.
பத்தாண்டுகளுக்கு இதே ஆட்சி
இந்த நிலையில் எனது 92வது ஆண்டு செய்தியாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்கு பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.
தேசம் மிருகப்பிராயத்திற்குப் போயக் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்படவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடு தான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத்தக்கதாய் இருந்துவருகிறது.
இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சி தான் என்று உறுதியாய்க் கூறுகின்றேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும் ?
காமராஜர் மாறி வருகிறார் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆடசிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்தவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான். மதாவது வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி உறுதியேயாகும். ஏணிப்படிச் சொல்லுகிறேன் என்றால் இந்தியா முழுவதற்குமே இன்று வர்ணாசிரமபாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள் என்பவர்கள் அல்லாமல் வேறு கட்சியும் இல்லை, மக்களும் இல்லை,கொள்கையும் இல்லை,காமராஜர் பலமற்றுப் போய்விட்டார். இவரது எண்ணங்களும் மாற்றமடைந்து வருகிறது; பார்ப்பனனைத் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் (காங்கிரசும்) உருக்குலைந்துவிட்டது.அவருக்கு உதவியாளரும் யாரும் தகுதியானவரில்லை. இவை மாத்திரமா நமது பொது எதிரியான பார்ப்பனத் தலைவர் நம் சமுதாயத்தை அழித்து, ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இராஜாஜி பலம் பெற்றுவருகிறார்.இதற்குக் காரணம் காங்கிரசு பிளவுபட்டதேயாகும்.
ஆட்சி மாறினால் பலாத்கார தாண்டவம்
இந்த நிலையில் இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது , மற்றெது வருமென்றால் பார்ப்பனராட்சி இராஜாஜி ஆதிக்க ஆட்சி தான் வரும். அதுவோ வேறு எதுவோ வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்த் தானிருக்கும் அல்லது அசல் காலித்தன பலாத்காரத்தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
ஆகவே எனது 92-ம் ஆண்டு செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அனுபவ அறிவைக் கொண்டு சொல்லுகிறேன் : மக்ககள் எல்லோரும் பகுத்திவுவாதிகளாக மாறுங்கள்.
எப்பாடுபட்டாவது இன்றைய தி.மு.க. ஆட்சியை இனியும் ஒரு பத்தாண்டுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள் என்பது தான்.


ஈ.வெ.ராமசாமி

தந்தை பெரியார் 91-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 91-வது பிறந்தநாள் செய்தி



எனது நிலை
எனக்கு 90வது ஆண்டு: “பிறந்த நாள் விழா” மலரில்
“எனது நிலை’ என்கின்ற கட்டுரை எழுதும் போது, 91வது ஆண்டு “பிறந்த நாள் விழா” மலருக்கு எனது நிலை என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ 91வது ஆண்டு “பிறந்த நாள் விழா” மலருக்கும் எனது நிலை என்பது பற்றி எழுதும்படியான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதாவது 90வது ஆண்டு “பிறந்த நாள் விழா” மலரில் 'எனது நிலை என்ற கட்டுரையில்
“எனக்கு வயது 90.
உடல் நிலை மிகவும் மோசம். கைகால் நடுக்கம் அதிகம். சிறுநீர் கழிக்கும்போது சப்தம் போட்டுக்கொண்டுதான் கழிக்கிறேன் அதாவது அவ்வளவு வலி.தூக்கம் சரியாய் வருவதில்லை. நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலியேற்பட்டு சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது.
உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை. முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை. எந்தக் காரியம் பற்றியும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சில் வலி திடீரென ஏற்படுவதும் வந்த பிறகு குறைவுதுமாக இருக்கிறது.
எதைப் பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது. சுருக்கமாக சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது.
என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்.
நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள்.
அந்தப் படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச் செலவுத் தொகையை ரூ.100-ல் இருந்து ரூ.150-ஆக ஏற்படுத்தி விட்டேன்.
நூறு ரூபாய் எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதியவைகளுக்கு அனேகமாக சரியாய்ப் போய் விடும். சுயீல சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2/3 பயணம் ஏற்பட்டால் ஒரு அளவு மீதியாகி பிரசாரத்திற்கு பயன்படும்.
இப்போது எனக்குப் பெரிய வண்டி வரப்போகிறது. செலவு அதிகமாகும். எனக்கு பிராசாரத்திற்கே வேறு அநேக செலவு இருக்கிறது. எனக்கு இனி பிரசாரத்தில் ஆசை இல்லை. ஒரு வாரப்பத்திரிக்கைத் துவக்கி அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும் எனபதில் தான் ஆசை அதிகமாக இருக்கிறது. வெளியாக்கப்பட வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. இதற்காக எளிதில் காணமுடியாத ஒரு தனி இடத்திற்கு போகலாமா அல்லது ஈரோட்டிற்கே போய் விடலாமா என்று கூட எண்ணுகிறேன்
இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்கு கவலை இல்லை. இருந்தவரைக் தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன்.ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும், ஏற்படுவதும் இயற்கையேயாகும். அது போல் என் முடிவும் இருக்கலாம்.
பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னவோ !”
இந்தப்படி எழுதி இருக்கிறேன். அதை ஊன்றிப் படித்தாலே நான் எழுதியதின் தன்மை விளங்கும்.
இப்போது எனக்கு 90 ஆண்டு முடிந்து 91 வது ஆண்டு நடக்கிறது என்றாலும், 90வது ஆண்டுக்கும் 91 வது ஆண்டுக்கும் இடையில் ஏற்பட்ட எனது உடல் நிலையின் தன்மை 91வது ஆண்டு போல் இல்லாமல் 94, 95 வது ஆண்டு என்று கருதும்படி அவ்வளவு கிழத்தன்மை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிட்டது.
இது உடல்நிலை மாத்திரமல்லாமல் பஞ்சேந்திரியங்க
ளோடு புத்தி, மனது, சிநதனா சக்தி முதலிய தன்மைகளும் மிக்கக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன.
என்றாலும் இவ்வோரண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால் எனக்கு மற்ற கருவி காரணாதிகள் பலக் குறைவு எப்படி இருந்தாலும் மனம் உற்சாகம் அடையும் படியான பல நிகழ்ச்சிகள் காணப்படகின்றன.
முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் . மந்தரிகளில் பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜீகளில் 14 பேர் தமிழர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100க்கு 50க்கு மேல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது.
அரசியலில் அளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைவர்கள், பணியாளர்கள் யாவருமே 100க்கு 100ம் தமிழர்களே யாவார்கள். இதை அனுசரித்தே மற்ற நிலைகளும் மாற்றடமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் திமுக ஆட்சி என்றே சொல்லுவேன்.
காங்கிரஸ் மத்திய ஆட்சி ஆதிக்கத்தில் பச்சையாகப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு-தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சயமரியாதைக்கும் நல்ல வெற்றி வாய்ப்பு என்றே சொல்லத்தக்கவையாகும்.
மற்றும் 90வது பிறந்த நாள் விழா மலரின் 'எனது நிலை கட்டுயிைல் நான் குறிப்பிட்ட சலிப்புகள் இப்போது எனக்கு குறைவென்றே சொல்லலாம்.
ஊதாரணமாக 90வது “பிறந்த நாள் விழா” மலரில் 'எனது நிலை’ என்ற கட்டுரை முடிவில் துறவி யாய்ப் போய் விடலாமா ? என்று எழுதி இருக்கின்றேன்.
இன்று எனக்கு அப்படி இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராஜரும், அறிஞர் அண்ணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது “இப்போது உங்களுக்கு எதற்காக கவலை ? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறத? கவலையை விட்டு விடுங்கள் “ என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் “விபீஷணப் பரம்பரை” வளர்ந்து வருவதுதான்.இது தமிழரில் சில “ஜாதிக்கு'(வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதே .
ஆகவே எனது 90வது வயதை விட 91 வது வயது திருப்தியையும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்க கூடியதாக இருக்கிறது என்பது எனது கருத்து.

விபீஷணர்கள் திருந்துவார்களாக
திமுக ஆட்சி இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஒடவில்லை எழுதவும் முடியவில்லை.

ஈ.வெ.ராமசாமி