Sunday 17 September 2017

தந்தை பெரியார் 92-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 92-வது பிறந்தநாள் செய்தி


பிறந்த நாள் செய்தி
எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது.
17-9-70வது நாள் முதல் 92 வது ஆண்டு துவங்குகிறது.


91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் போல் எனக்குத் தோன்றுகிறது. மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதல்களுக்கு இணங்கு பவர்கள் போல் மக்களை காண்கிறேன்.


மேலும் மாறுதடையுங்கள்
அதாவது கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதலடைய பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இரந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவுக்கும் காரணமாகும்.
இந்த நிலையில் நான் எனது 92வது பிறந்த நாள் சார்பாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளுவதெல்லாம் மனம் துணிந்து மேலும் மாறுதலடையுங்கள் என்பதேயாகும்.
நான் இந்த நிலை அடைந்ததற்கும், மக்களை இந்த அளவுக்கு நான் வேண்டுவதற்கும் முக்கியமான காணரம் இந்த இரண்டு மூன்றாண்டுகளாக நமது நாட்டில் நடந்து வரும் ஆட்சியேயாகும்.
பார்ப்பன சூழ்ச்சி தவிடுபொடி ஆயின
நமது நாட்டு ஆட்சியானது பகுத்திறவு ஆட்சி என்பதோடு, எந்தவித மாறுதலுக்கும், எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டி ருக்கிறது. இது இயற்கையின் காரணம் என்றாலும் மக்கள் இன்ப வாழ்வு வாழ்கிறார்கள் என்று திருப்தியடையத் தக்கதாகவே இருந்து வருகிறது. எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.
இவற்றை ஏன் பெருமையாக குறிப்பிடுகிறேனென்றால் பதவி வெறியால் தூண்டப்பட்ட எதிரிகள் , எதிர்க்கட்சிகள் ‘தங்கள் சமுதாயத்திற்கு ஆபத்து வந்துவிட்டது” என்று கருதி பயந்து கிடக்கும் நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் இந்த ஆட்சியை அழிக்கச் செய்த, செய்து வருகிற இமாலய் பிரயத்தனங்களை தவிடு பொடியாகி வருவதுடன் எவ்விதத் தடையுமின்றி ஆட்சியின் காரியம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பது தான்.
பத்தாண்டுகளுக்கு இதே ஆட்சி
இந்த நிலையில் எனது 92வது ஆண்டு செய்தியாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்கு பாதுகாத்து வரவேண்டுமென்பதே ஆகும்.
தேசம் மிருகப்பிராயத்திற்குப் போயக் கொண்டிருக்கிறது. யாரும், எப்படிப்படவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவதில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காண முடிவதில்லை. பொதுவில் பார்த்தால் நமது நாடு தான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத்தக்கதாய் இருந்துவருகிறது.
இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சி தான் என்று உறுதியாய்க் கூறுகின்றேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும் ?
காமராஜர் மாறி வருகிறார் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆடசிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்தவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான். மதாவது வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி உறுதியேயாகும். ஏணிப்படிச் சொல்லுகிறேன் என்றால் இந்தியா முழுவதற்குமே இன்று வர்ணாசிரமபாதுகாப்பு ஆட்சி, கட்சி, மக்கள் என்பவர்கள் அல்லாமல் வேறு கட்சியும் இல்லை, மக்களும் இல்லை,கொள்கையும் இல்லை,காமராஜர் பலமற்றுப் போய்விட்டார். இவரது எண்ணங்களும் மாற்றமடைந்து வருகிறது; பார்ப்பனனைத் தஞ்சமடைய வேண்டிய நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். அவரது கட்சியும் (காங்கிரசும்) உருக்குலைந்துவிட்டது.அவருக்கு உதவியாளரும் யாரும் தகுதியானவரில்லை. இவை மாத்திரமா நமது பொது எதிரியான பார்ப்பனத் தலைவர் நம் சமுதாயத்தை அழித்து, ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இராஜாஜி பலம் பெற்றுவருகிறார்.இதற்குக் காரணம் காங்கிரசு பிளவுபட்டதேயாகும்.
ஆட்சி மாறினால் பலாத்கார தாண்டவம்
இந்த நிலையில் இன்றைய நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது , மற்றெது வருமென்றால் பார்ப்பனராட்சி இராஜாஜி ஆதிக்க ஆட்சி தான் வரும். அதுவோ வேறு எதுவோ வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்த் தானிருக்கும் அல்லது அசல் காலித்தன பலாத்காரத்தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
ஆகவே எனது 92-ம் ஆண்டு செய்தி என்பதாக எனது 91 ஆண்டு அனுபவ அறிவைக் கொண்டு சொல்லுகிறேன் : மக்ககள் எல்லோரும் பகுத்திவுவாதிகளாக மாறுங்கள்.
எப்பாடுபட்டாவது இன்றைய தி.மு.க. ஆட்சியை இனியும் ஒரு பத்தாண்டுக்கு நல்ல பலம் பொருந்திய ஆட்சியாக இருக்கப் பாடுபடுங்கள் என்பது தான்.


ஈ.வெ.ராமசாமி

No comments:

Post a Comment