Sunday 17 September 2017

தந்தை பெரியார் 93-வது பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் 93-வது பிறந்தநாள் செய்தி


பிறந்த நாள் விண்ணப்பம்
எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நணபர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்தநாள் மலருக்கு சேதி கொடுத்துக் கொண்டு தான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்தநாள் என்பது எனது பிராசாரத்திற்கு ஒரு சாதனமாக ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு நல்ல சேதியாகும்.
நான் ஒரு சமத்துவத் தொண்டன்
நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபவன், ஜாதி அமைப்பு என்பதுகடவுள், மதம்மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகின்றேன். மக்களோ பெரும்பாலும் கடவள் நம்பிக்கை உடையவராக ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவைள சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்பகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னை சும்மா விட்டுக்கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.
கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா ?
நானோ எனது பிரசாரத்தில், கடவளே இல்லை என்று சொல்வதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி செய்கையாலும் காட்டிக்கொண்டே, நடந்து கொண்டே வருபவன். இந்த நிலையில், எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படிகடவுளை செருப்பால் அடிக்கும்படிநான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.
இந்த நிலையில் எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால் கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா ? விட்டுக்கொண்டு இருப்பானா என்று, எந்தஎப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும் கடவுளாவது வெங்காயமாவது என்று கருதி, ஒரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிராசாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.
மக்களிடையே மாறுதல்
சென்ற எனது 92-ம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய பிறந்தநாள் செய்தியில்எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனசலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும் மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கின்றேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல் மக்களை காண்கிறேன்.
கடவுள், மதம், ஜாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடைய பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் அவாவிற்கும் காரணமாகும்
சலிப்பை நீக்கிய ஆட்சி
இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டுநான் ஏன் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்றுஎன்று எழுதி சலிப்படைந்து இருக்கின்றேன். இந்த சலிப்பைக்கண்டு காலஞ்சென்ற மாண்பு மிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராஜர் அவர்களும் எனக்கு ஆறதல் எழுதி உற்சாக மூட்டினார்கள்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகுதான் நான் உண்மையிலேயே நன்னம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

சாதி முறையின் மூலபலம்
?

     உண்மையில் எனது தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும்
, அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரசாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே ஒழிந்ததாக உள்ளது.
ஏன் எனில், ஜாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.
இப்போதும் சொல்லுவேன் : நாகரிகத்திற்காக சிலர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்து ஜாதியை நிலைநிறுத்துவது தான், ஜாதியை ஒழியாமல் பாதுகாப்பது தான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.
உண்மையில் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பது தான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டு தான் இப்படிச் சொல்லுகின்றேன்.
ஜாதி ஒழிப்பிற்கு எதிர்ப்பு இல்லை
அதாவதுகடவுளை செருப்பால் அடித்ததாக” 10 லட்சக்கணக்காக பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய ஜாதி துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடபட்டு 230 இடங்களில் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க) வெற்றிபெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திகள் நான் கொண்ட கருத்து அதன் அளவுக்கு மேல் மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.
இனி, நமது ஜாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டடது.
எனது திட்டம்
இந்த நிலையில், நான் நமது மக்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும்.
மற்றும் நான் நினைக்கின்றேன் - அண்மையில் ஒர் மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகின்றவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசணை கேட்டு காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்.

ஈ.வெ.ராமசாமி

No comments:

Post a Comment