Sunday 30 January 2022

காந்தியார் மறைவுக்கு அனுதாபக் கூட்டம் - தோழர் பெரியார்

 காந்தியார் மறைவுக்கு அனுதாபக் கூட்டம் 


காந்தியார் அவர்கள் இயற்கைக்கு விரோதமாக மரணமாக்கப்பட்டது குறிக்க அனுதாபப்படவும், கொலைச் சம்பவத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஊரிலும் திராவிடர் கழகத்தார் அனுதாபம் - கண்டனக் கூட்டம் 29.0248 ஞாயிற்றுக் கிழமையன்று ஏற்பாடு செய்ய வேண்டியது. கூட்டத்திற்கு ஆடம்பரம் கூடாது; செலவு கூடாது; ஒலிபெருக்கிக் கூடாது; சொற்பொழிவு கூடாது. தலைவர் அல்லது அவரால் அழைக்கப்பட்டவர் பின்வரும் தீர்மானத்தைப் படித்ததும், பொதுமக்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனமாக இருந்ததும், மிக அமைதியாக பிரிந்துவிட வேண்டியது.

 காந்தியார் மறைவுக்கு அனுதாபத் தீர்மானம் 

“சென்னை மாகாணத்தில் உள்ள, திராவிடர் கழகத்தின் கிளை ஸ்தாபனமாகிய ஜில்லா... ஊர் திராவிடர் கழகத்தார் சார்பாகக் கூட்டப்பட்டதும், திராவிடர் கழகத்தவர்கள் பெரிதும் கூடி உள்ளதுமான இக்கூட்டமானது, உலக மக்களால் போற்றப்பட்டவரும், இந்திய தேசிய காங்கிரஸ் நடப்புக்கு மூல காரணமாயிருந்து அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை, முதலிய உயர் குணங்களை சதா சர்வ காலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமருமான ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்து, தனது ஆழ்ந்த துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. 

இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும், அவனுக்கும் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும் மக்களையும் வெறுப்பு காட்டிக் கண்டிக்கிறது

இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு இந்நாட்டு மக்கள் யாவருமே ஜாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உண இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக! 

அன்பும், அறிவும், சத்தியமும், என்றும் எங்கும் நிகழ்வதாகுக, அவையே யாவற்றிலும் வெற்றி பெறுவதாகுக" 

இத்தீர்மானத்தை மத்திய நிலையத்துக்கும், காந்தியார் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும். பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது. செய்தியை எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பவும்.


-- குடி அரசு - அறிவிப்பு - 21.02.1948 



"காந்தியாரின் மறைவு” 

"குடிஅரசு” ஆபீஸ் அனுதாப விடுமுறை ஈரோடு, பிப். 3- பெரியார் காந்தியாரின் துக்ககரமான மரணத்தைக் குறித்து 2.2.1948 ஆம் தேதி, திங்கள்கிழமை காலை “குடி அரசு" உதவி நிர்வாகி தோழர் எம்.கே. குகநாதன் தலைமையில் அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. “குடிஅரசு'' ஆசிரியர் புலவர் நா. மு. மாணிக்கம் அவர்கள் மதவெறியனின் படுமோசச் செயலைக் கண்டித்துப் பேசியதுடன், நமது தலைவர் பெரியார் அவர்களின் 31.1.1948 தேதியின் ரேடியோ சொற்பொழிவை எடுத்துக்காட்டி விளக்கிப் பேசினார். பின்னர், அன்று ஆபீஸ் விடுமுறை விடப்பட்டது. 


-- குடிஅரசு - துணுக்கு - 07.02.1948 

பார்ப்பனர்களே! கனவு பலியாது - தோழர் பெரியார்

 பார்ப்பனர்களே! கனவு பலியாது 


காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று. இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களின்படி பதிமூணாம் நாள் அஸ்தி கரைக்கும் சடங்கு இந்திய யூனியன் முழுவதும், எந்த அளவு இந்து மத வெறிக்கு இடம் கொடுக்க முடியுமோ, அந்த மாதிரியான நடவடிக்கைகளால் நடந்து முடிந்திருக்கிறது. காந்தியாரைப் படுகொலை செய்தவன் ஒரு பார்ப்பனன் - இந்துமத சாம்ராஜ்ய வருணாசிரம வெறியன் என்கின்ற கொடுமையை எப்படி மறைக்கிறது என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், பார்ப்பனியத்திற்கு ஒத்தாசையாக இருந்தே வயிற்றுப் பிழைப்பையும், கவரவத்தையும் மற்ற நடவடிக்கைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்துவிட்ட பக்தர்கள், தொண்டர்கள், தலைவர்கள், தியாகிகள், மந்திரிகள் என்பது போல பல முத்திரைகள் குத்திக் கொண்டவர்களும், பிரபுக்கள், ஜமீன்தார்கள், கள்ள மார்க்கட் வியாபாரிகள் என்கிற பெயர்களிலிருக்கிற பகற்கொள்ளைகாரர்களும், ஆச்சாரியர்கள், சுவாமிகள், மகந்துக்கள், என்கின்ற பெயர்களிலிருக்கிற தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் சேர்ந்து போட்டிப் போட்டுக் கொண்டு "படிதாண்டாத பக்தர்களாக” ஆகிப் பார்ப்பனிய மதத்திற்கு இப்போதைய நிலைமையில் எவ்வளவு பாதுகாப்புச் செய்ய முடியுமோ, அவ்வளவையும் செய்து விட்டார்கள். இந்த நடவடிக்கைகள் மறைந்த பெரியார் காந்தியாருக்கு மரியாதையைச் செய்வதாகும் என்று சொல்லப்படுவதை நாம் ஒப்புக் கொண்டாலும், இந்தக் காரியத்தின் ஆடம்பரங்களால் பபனியம் எப்படி உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி விட்டது? அதனுடைய ச செயல் நிறைவேறுவதற்கு மேலும் எந்த மாதிரிக் காரியங்கள் செய்து வருகின்றது? என்பதைத்தான் இங்கு எடுத்துக்காட்டுவதற்கு ஆசைப்படுகிறோம்.



பார்ப்பனிய மதக் கொடுமையை - வஞ்சகத்தை - மானத்தை அழிக்கும் செயலை காள்ளையும், கொலையும் செய்யும் கொடிய போக்கினை இந்த திராவிட நாட்டில் பந்து மறைந்த ஒவ்வொரு அறிவாளியென்று பெயர் எடுத்தவர்களும், அந்தந்தக் காலத்தில் எந்தெந்த அளவு அவர்களால் தெரிவித்திருக்க முடியுமோ, அப்படி அப்படித் தெரிவித்துத்தான் போயிருக்கிறார்கள் என்பதையும், அவைகளெல்லாம் வெறும் பக்திக்குரிய, பூஜைக்குரிய, பாராயணத்திற்குரிய ஏட்டுச் சுரைக்காய்களாக ஆகிவிட்டன என்பதையும் 

அவற்றை தெரிவித்தவர்கள், சித்தர்கள், அடியார்கள், வள்ளலார்கள், மகான்கள் என்கிற வழக்கங்களிலிருந்து பெயர்களுக்குரியவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும், இந்த பெரியார்களுடைய கருத்துக்கள் மக்களுக்குப் பிரயோசனப்படாமல் தெரிவித்துத்தான் போயிருக்கிறார்கள் என்பதையும், அவைகளெல்லாம் வெறும் பக்திக்குரிய, பூஜைக்குரிய, பாராயணத்திற்குரிய ஏட்டுச் சுரைக்காய்களாக ஆகிவிட்டன என்பதையும் அவற்றை தெரிவித்தவர்கள், சித்தர்கள், அடியார்கள், வள்ளலார்கள், மகான்கள் என்கிற வழக்கங்களிலிருந்து பெயர்களுக்குரியவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதையும், இந்த பெரியார்களுடைய கருத்துக்கள் மக்களுக்குப் பிரயோசனப்படாமல் போவதற்குப் பார்ப்பனியம் என்னென்ன குள்ளநரிச் செயல்கள் செய்ய வேணுமோ, அதையெல்லாம் செய்துவிட்டது என்பதையும் நாம் பல முறையும் விளக்கி வந்திருக்கிறோம். 

இந்தப் பார்ப்பனர்களின் மோசடித் தன்மை தொலைய வேண்டுமானால், இந்த நாட்டு மக்களை மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து தடுத்தாக வேண்டுமானால், மக்கள் எல்லோரும் ஒரே குலம் என்கிற நல்லுணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டுமானால், உலகத்தின் மற்ற நாடுகளைப் போல் நாமும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால், முதலில் மக்களுக்கிடையே வளர்க்கும் பரப்பப்பட்டிருக்கும் மதவுணர்ச்சியின் பண்டிகைகள் வெறுக்கப்பட வேர்களுக்கு வெந்நீரை ஊற்ற வேண்டும்; வேண்டும் குருட்டுத்தனமான மதவுணர்ச்சியை வெறுக்கப்பட வேண்டும்; அயோக்கிய செயல்களுக்கெல்லாம் வளர்ப்பு பண்ணைகளாயிருந்து, மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கும் மடாலயங்கள் எல்லாம் மக்களின் சொத்தாக ஆக வேண்டும்; காந்தியார் சொன்னது போல் விபசார விடுதிகளாயிருக்கும் கோவில்கள் எல்லாம் கோயில் பூனைகளுக்குப் பால் பண்ணையாக இல்லாமல், மக்களுக்கு அறிவுப் பண்ணையாக ஆக வேண்டும். என்கிற கிளர்ச்சியை இந்த நாட்டில் கல்லெறிக்கும், சாணி வீச்சுக்கும் செருப்பு வீச்சுக்கும் இடையிலும், அக்கினித் திராவகம் வீசுதல், நெருப்பு வைத்து பந்தலை எரித்தல், சேலையையுரிந்து மானபங்கப்படுத்துதல் என்கிற காங்கிரசார் ஆட்சிய நடந்த அக்கிரம அட்டூழிய செயல்களுக்கிடையிலும், நமது தலைவர்களும் தொண்டர்களும், தாய்மார்களும் எந்த விதமான சொந்த பிரயோஜனத்தையும் கருதாமல் விடாது செய்து வந்திருக்கிறார்கள் என்பதையும் திராவிட நாடு நன்கறியும். 

பார்ப்பனர்களின் அக்கிரமமான நடத்தையைப் பொறுக்க முடியாமல், மனிதப் பண்பின் மீது வைத்த நம்பிக்கையினால், இந்த மாதிரியான கிளர்ச்சி வலும் 25 வருடங்களாகவே நடந்து வந்தாலும், இந்த நாட்டு மக்களை ஏமாற்றி வாழவல் தொழிலாகக் கொண்ட பார்ப்பன வர்க்கத்தின் பிரதிநிதிகளான 'இந்து', 'சுதேசமித்திரன்' என்கிற விஷ ஊற்றுகளும், அவைகளின் கிளைகளான 'விகடன்', 'கல்கி' போன்ற விஷ சாக்கடைகளும் பாஷ்யங்கள், பட்டாபிராமன்கள் வரதாச்சாரிகள், வைத்தியநாதர்கள் என்கின்ற விஷ கொசுக்களும், பரவி, தீண்டி, கொட்டி வருகிற கொடுமைகளாலும், நம்முடைய இனத் துரோகிகளான கவிதாமணிகள், ரிப்பேர் செய்யும் எவ்வளவு துணிந்து பண்டிதர்கள் என்பவர்கள் அவர்களோடு கூடிக் கொண்டு அவர்கள் வீசி எறியும் எச்சிலை சுவைத்து புளுகுகளை மூட்டை ருசித்து, ரசித்துக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் இருந்து வருவதாலும், மக்களுடைய சிந்தித்துணரும் திறனை எல்லாத் துறைகளிலும் பங்கு போட்டுப் பறிமுதல் செய்துவந்த துணிவினாலும் நம்மையே நாஸ்திகர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும், வகுப்புவாதிகள் என்றும் கூசாமல் பார்ப்பனர்கள் பட்டம் சூட்டினார்கள். 

தீவிரவாதிகள், அதி தீவிரவாதிகள் என்று அரசியலில் பெயர் எடுத்தவர்கள் எல்லாம், இந்த மதக் கொடுமையை அறிந்தும் கூட வெளியில் சொல்வதற்கு அஞ்சி வாழ்ந்த காலத்தில், மதவுணர்ச்சியைப் பெருக்குவது, வளர்ப்பது நல்லதல்ல. மத வெறி நாட்டிற்குப் பெரிய தீமையைச் செய்யும் என்று நாம் கூறிய போது நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்னதற்கு ஆக நாம் பின் வாங்கவில்லை. ஏன்? எப்படியாவது உண்மை வெளிப்படத்தானே வேண்டும்? எவ்வளவு காலத்திற்குத்தான் புரட்டர்களுடைய திருகுதாளங்கள் வெற்றியடையும்? என்று எண்ணிய உறுதியான நம்பிக்கையினாலேயே நம் நம்பிக்கை வீண் போகவில்லை. பெரியார் காந்தியாருடைய படுகொலைக்குப் பிறகு, இந்த நாட்டிலுள்ள எல்லா பத்திரிகைகளும், ஒரே குரலாக மகாத்மாவை மதவெறி அழித்துவிட்டது. மதவெறி ஒழிக! மத வெறியே மாண்டு போ! என்று கூறுவதைக் கேட்க, “அப்பாடா! இப்பொழுதாவது இந்த பத்திரிகைகளுக்கு ஞானம் வந்து விட்டதே” என்று நம் கோரிக்கை வெற்றி பெற்றதை எண்ணிப் பெருமூச்சு விட்டாலும், இவர்களுக்கு இந்தப் புத்தி வருவதற்காக காந்தியாரா படுகொலையடைய வேண்டும்? என்பதையும், வந்த புத்தி நிலைத்திருந்து அதற்கான வழிகளில் ஈடுபட வேண்டாமா? பதையும்தான் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ண வேண்டிவர்களாகவும் இருக்கின்றோம். 

இன்றைக்கு “மதவெறி”, “மதவெறி " என்று முழக்கமிடுகின்ற பத்திரிகைகள், மதவெறியை, விஷ நீரை ஊட்டுவதற்காக என்னென்ன முறைகளைக் படது? எவ்வளவு துணிந்து அயோக்கியத்தனமாகப் பொய் புளுகுகளை மூட்டை யாகப் பரப்பியது? இதற்கு சித்திரங்கள், இசைகள், சினிமாக்கள், செய்தி ங்களை எப்படி துணையாகச் சேர்த்துக் கொண்டது? என்ற ளையெல்லாம் கொஞ்சமும் எண்ணிப் பாராமல் இப்போது மதவெறியே! போ! என்று போடுகிற கூச்சலால் ஏற்படப்போகும் பிரயோசனமென்ன? முந்தின போக்குத் தவறான பாதை என்பதை உணராவிட்டால், இப்போது “மதவெறி” “மதவெறி" என்று சேர்ந்து கோவிந்தா போடுவதனுடைய அர்த்தமென்ன ?

உண்மையாகவே மதவெறி கொடுமை யானது என்பதை இந்த நாட்டு பார்ப்பனர்கள் உணர்ந்தார்கள் என்றோ, பார்ப்பனப் பத்திரிகைகள், தேசியப் பத்திரிகைகள் தெரிந்துகொண்டு விட்டன என்றோ எவராவது சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் உணரவில்லை, பார்ப்பன பத்திரிகைகள் தெரிந்துகொள்ளவில்லை என்ற நிலைமை இருந்தால் கூட பாதகமில்லை. ஒரு பக்கம் இந்த மதவெறி மதவெறி என்று கூப்பாடு போட்டுக் கொண்டே, மற்ற ஒன்பது பக்கங்களிலும் செய்ய வேண்டும் என்பதிலே மதவெறியைப் பெருக்குவதற்கான காரியங்களையே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செய்கிறதென்றால் இந்த போக்குக்கு ஒரு முடிவில்லையா? ஏ! பார்ப்பனியமே! இந்த நாட்டையும் ரத்தக்கறை படிய செய்ய வேண்டும் என்பதிலே ஏன் உனக்கு இவ்வளவு ஆசை? என்பதை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"திராவிடர் கழகம் ஒரு வகுப்பு வாத ஸ்தாபனம். பார்ப்பனர்கள் மீது துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதை இந்த நேரத்திலே ஒழித்துக் கட்டவேண்டும்” என்கிறது இந்து. பேஷ்! ஒரே கல்லால் இரண்டு பட்சிகளை - ஏன் - மூன்று பட்சிகளை வீழ்த்தும் திட்டம் என்று அது உள்ளம் மகிழலாம். காந்தியாரைச் சாகடித்ததற்கு ஏதோ சில பார்ப்பனர்களையாவது பலி கொடுக்க வேண்டியிருக்கிறதே. இந்த பலியினாலேயே ஏன் திராவிடர் கழகத்தையும் வீழ்த்திவிடக் கூடாது? இதுதான் பார்ப்பனர்களின் விருப்பமும், திட்டமும். இந்த செயலுக்கு ஒத்துழைப்போமா? வேண்டாமா? எந்த அளவு ஒத்துழைக்கலாம்? எப்படி இதை வைத்துக் கொண்டு பயமுறுத்தலாம்? என்கிற ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றது, இன்றைய 'திராவிடர்களை' அதிகமாக்க கொண்டிருக்கும் நம் "திராவிட நாட்டு மந்திரி சபை'. மந்திரி சபை மனம் வைத்தால் “ஒரு நாலெழுத்து எழுதிவிட்டால் போதுமே'' என்று எதிர்பார்க்கின்றார்கள் நம் அருமைப் பார்ப்பனர்கள். எதிர்பார்க்கட்டும்! திராவிடர் கழகத்தை ஒழித்து விடுவதற்காக எழுதுகின்ற அந்த நாலு எழுத்துக்களே, மந்திரி சபையையும் கவிழ்த்து விடுவதால் போதுமானது என்று எண்ணுகிறது, அவர்களின் சூழ்ச்சி படிந்த மனம். அதுதான் அவர்கள் கருதுகின்ற மூன்றாவது பட்சியாகவும் இருக்கலாம். 

நாம் பார்ப்பனர்களுக்குப் பல முறை கூறியிருக்கிறோம். இது மனு மாற காலமல்ல! உங்களுடைய பேடித்தனமான, மறைந்து தாக்கும் வேலைகள் என திராவிட நாட்டைப் பொருத்தவரையில் பயன்படாது! உங்களுக்குச் விபீஷணர்கள் அகப்பட்டாலும் கடைசிவரைக்கும் விபீஷணர்களாயிருக்க எந்த திராவிடனும் அகப்படமாட்டான்! அப்படி அகப்பட்டாலும் அவன் ஒரு திராவிடனாகவும், திராவிடனுக்குப் பிறந்தவனாகவும் இருக்க மாட்டான் என்றே எதிர்கால வரலாற்றிலே இடம் பெறுவான்! அப்படியே சிலர் அகப்பட்டாலும் அவர்களுடைய துணையைக் கொண்டு திராவிடர்களை அழித்து விடலாமென்று மனதினால் எண்ண வேண்டாம்! ஒவ்வொருத்தனும் “ஏன் நான் தேவடியாள் பிள்ளை ? ஏன் நான் நாலாம் ஜாதி? அய்ந்தாம் ஜாதி? இந்த நாட்டை என் முன்னோர்கள் ஆளவில்லையா?" இப்பொழுது நான் பாடுபடவில்லையா? உழைக்கிறவன் நான். அய்க்கியம், தேசியம், மதம், கடவுள், வெங்காயம் என்கிற பெயர்களால் மேனி வாடாமல் உண்ணுகிறவன் நீயா? என்று தாழ்த்தப்பட்ட தோழர்களிலிருந்து உயர்த்தப்பட்டதாக நடித்துக் கொண்டிருக்கிற மந்திரிகள் வரை கருதிக் கொண்டிருக்கிற காலம் இது. 

நீங்கள் சொல்லி வந்த “தேசத் துரோகிகள்'' என்கிற பட்டம் இனி நாட்டில் செலவாணியாகாது என்பதைத் தெரிந்துகொண்டு, “வகுப்பு வாதிகள்”, “வகுப்பு வேஷிகள்” என்கிற பட்டத்தைத் தீவிரமாகக் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். இது நெஞ்சறிந்த பொய் என்று உங்களுக்குத் தெரியும்! வகுப்புத் துவேஷிகள் நீங்களா? அல்லது நாங்களா? இருந்தும், இந்த அபாண்டத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பரப்புகிறீர்கள்! 

"சொல்லுகிறவன் சொன்னாலும் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு'' என்கிற பழமொழியைத் தெரிந்திருக்கும் நீங்கள் தான், அந்தப் பழமொழியை அறிந்திருக்கும் மந்திரிகளிடத்தில் தலையணை மந்திரம் செய்கிறீர்கள்! மெய்யாகவே நாங்கள் வகுப்புத் துவேஷிகள், உங்களை (பார்ப்பனர்களை) ஒழித்து விட விரும்புகிறவர்கள் என்று கருதுகிறீர்களா? அது உண்மையாக இருந்தால், உங்களுடைய அட்டூழியமான அநீதிகளால் எத்தனை அக்கிரகாரங்கள் இதுவரை சாம்பலாகியிருக்க வேண்டும்? எத்தனை பேர்கள் நடுத்தெருக்களிலேயே நாய்களைப் போலச் சாகடிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? வட நாட்டிலே நடந்த மிருகச் செயல்களை நாள்தோறும் கேட்ட இந்த நாட்டில், வகுப்பு வெறி திராவிடர்களால் பரப்பப்பட்டு வருகிற நிலையிருந்திருந்தால், உண்மையாகவே பார்ப்பனன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு புல் பூண்டு இங்கே இருக்க முடியுமா? ஏன் விபரீதமான முயற்சியில் இறங்குகிறீர்கள்! நீங்களே பார்ப்பனன், பிராமணன், துரோகிகள் என்று சொல்லிக் கொள்வதிலே, அழைக்கப்படுவதிலே வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, உங்களைக் கொன்றெறிந்து விட வேண்டுமென்ற எண்ணம், அதற்கான நடவடிக்கை எங்களிடத்தில் ஒரு காலத்திலும் இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதாயிருந்தால், முதலில் பார்ப்பனியத்திற்குப் பாதுகாவலாய் இருக்கும் எங்கள் தாய்களையும், தந்தைகளையும், மனைவிகளையும் கொலை செய்ய  வேண்டியவர்களாவோம். ஏன்? நாங்கள் அழிய வேண்டுமென்று விரும்புவது பார்ப்பனர்கள் அல்ல. பார்ப்பனியமே. 

இதற்கு மாறுபாடாக உங்களுடைய இரத்தத்தைச் சிந்தாமலே, எங்களுக்குள்ளே மோதச் செய்து எங்களை அழிப்பதிலேயே கண்ணும் கருத்தும் வந்திருக்கிறீர்கள்! கூடிக் கெடுப்பது, அடுத்துக் கெடுப்பது, பேசிக் கெடுப்பது என்கிற முறைகளும் அதைக் கையாளுகிற ஆண்களும், பெண்களும் என்ற நிலையம்  இனி பிரயோசனப்படாது என்ற முடிவுக்கு வந்தவர்களாய், இந்து மகா சபை பெயரால் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் ஆயுதங்களைச் சேர்த்தீர்கள். கோவில்களுக்குள்ளேயே கவாத்துப் பழகினீர்கள்! இவற்றை , மறுக்கமுடியுமா? 

மதவெறி, ஜாதிவெறி ஒழிய வேண்டும் என்பதிலே அக்கறையும், ஆசையும், உண்மையும் இருக்கிறதென்றால் என்ன செய்ய வேண்டும்?

மத சம்பந்தமான பேச்சுகளை, மதப்பெருமைகளைக் கூறுகின்ற நூல்களை, பேசுவது, எழுதுவது, வெளியிடுவது, விற்பது என்கிற உங்களுடைய போக்கை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதக் கதைகளை எழுதி எழுதிப் பாமரர்களை வஞ்சிப்பதையும், இராமாயணக் கதைகளை எழுதி, எழுதி இழிவுபடுத்தி வருவதையும், புராணங்களை எழுதி, எழுதி புல்லறிவை வளர்ப்பதையும் விட்டொழித்து விட வேண்டும். நிர்வாணப்படங்களைப் போட்டு, ஆடலழகிகளைக் காண்பித்து மக்களை ஆலயங்களுக்கு அழைக்கும் போக்குக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. மடச்சாமிகளைக் காட்டி மகேஸ்வரன் பெயரைச் சொல்லி மக்களை மந்தமதியினராக்குவதை விட்டொழிக்க வேண்டும். புராண நாடகங்கள், புராண சினிமாக்களை வளர்ப்பது புனிதமானது என்ற போக்கை கைவிட வேண்டும். எந்த கலைகளுமே இந்த நாட்டுப் பழங்குடி மக்களின் வாழ்வைக் கெடுக்கும் நாச கருவிகளால் கையாளப்படுவது வெறுக்கப்பட வேண்டும். ஜாதிக்கொரு நீதி என்ற “இந்துலாவை” எடுத்துவிட உறுதி வேண்டும். ஒத்த தகுதிக்கு எல்லா மக்களையும் கொண்டுவர முயற்சிக்க வேண்டுமே தவிர, தகுதியில்லாத பலரை ஒரு பட்டியலில் சேர்த்து, தகுதியும் திறமையும் என்று பேசுவதை மறந்துவிட வேண்டும். மத வேறுபாடுகளைக் காட்டும் மதச் சின்னங்களை அணிந்திருப்பது ஆபத்து என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த வேலையை இன்னார்தான் செய்ய வேண்டுமென்ற ஜாதிக்கட்டுப்பாட்டை இந்தநாள் வரைதான் கூற வந்தோம், இனி அந்தப் போக்கு உதவாது என்பதை உணர வேண்டும். காந்தியா மரணத்தை அறிந்து கொள்ள முடியாத ஜோதிடர் வர்க்கங்களையும், தேவ பாலை என்கிற செப்படி வித்தை செய்துவரும் முன்ஷிகள், சாஸ்திரிகள், புரோகிதர்கள் என புரட்டர்கள் வர்க்கங்களையும், வேத பாராயணப் பெயரால் விதவிதமான வேல போடுபவர்களையும் அம்பலத்தில் இழுத்து வந்து அவர்களின் அக்கிரமங்களை விளக்கிக் கூற வேண்டும். மக்களின் உழைப்பை, செல்வத்தை மதப்பெயர் கூறி எவர், எந்த முறையில்  வஞ்சித்தாலும், அந்த இழிவை இன்றே ஒழிப்பதற்கு அக்கறை காட்ட வேண்டும்.

இவற்றைச் செய்வீர்களா? இக்காரியங்களை செய்ய முன்வராமல் மேலும் மேலும் வகுப்பு வெறியையே வளர்க்கப் போகின்றீர்களா? பதில் கூற வேண்டியதில்லை. நீங்கள் இனிச் செய்து வரும் செயல்களே நாட்டில் பதில் கூறுவதாக ஆகும். ஆனால், இந்துமத சாம்ராஜ்ய கனவை - வருணாசிரம வக்கிர ஆட்சிக் கனவை - எந்தப் பெயராலும், எந்த எந்த நடவடிக்கைகளாலும் உங்களால் இந்த நாட்டில் இனி ஏற்படுத்த முடியாதென்பது மட்டும் உறுதி.

-- குடிஅரசு - தலையங்கம் - 21.02.1948 

காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் – தோழர் பெரியார்

 காந்தியாருக்கு ஞாபகச் சின்னம்


காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமானதாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை :

1. இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக- ‘காந்தி தேசம்’ அல்லது  ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடப்படலாம்.

2. இந்து மதம் என்பதற்குப் பதிலாக  ‘காந்தி மதம்’ அல்லது ‘காந்தினிசம்’ என்பதாக மாற்றப்படலாம்.

3. இந்துக்கள் என்பதற்குப்பதிலாக-மெய்ஞ்ஞானிகள் அல்லது சத்ஞானஜன்’ என்று பெயர் மாற்றப்படலாம்.

4. காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு; வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்படமாட்டாது. ஞானமும் (அறிவும்) பசஷமும் (அன்பும்) அடிப்படையாகக்கொண்டது; சத்து அதாவது சத்தியமே தித்தியமானது என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக – ‘காந்தி ஆண்டு’  என்று துவக்கலாம்.



இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான், புத்தர், கிறிஸ்து, முகம்மது முதலிய பெரியார்களுக்கு காந்தியார் ஒட்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஒச் சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும்; உலக மக்களால் நாம் நன்கு மதிக்கப்படுவோம்; இந்தியாவுக்கு சாபக்கேடு எது எது சொல்லிவரப்பட்டதோ அதெல்லாம் மறைந்துவிடும். ஆசிய சமாஜ், சீக் சமாஜ், பிரம்ம சமாஜ் என்பது முதலிய எத்தனையோ புதிய மார்க்கங்கள் (கொள்கைகள்) ஏற்பட்டும் ஒன்றும் இந்தியாவை வெற்றி கொள்ளவில்லை. ஆனால், பவுத்த மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய மதம் ஆகியவை வெற்றிபெற்றுவிட்டன. இதன் காரணம், இவை அரசாங்க மதங்களாய் இருந்து வருவதே யாகும். ஹிந்துஸ்தான் முப்பது கோடிக்கு மேற்கொண்ட மக்களைக் கொண்டது. அதன் அரசியல் திட்டமாக- ‘காந்தியம்’ என ஏற்பட்டுவிடுமானால், கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரும். இன்றைய முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் ஆன கொலைபாதகப் பேயாட்டங்கள் இனி நடைபெற முடியாமலும் போகும்.

பெயர் மாறுதல்கள் காரணமாய் மதங்களுக்கும் தேசங்களுக்கும் கொள்கை, பெயர் மாற்றங்கள் ஏற்படுவது சகஜமாகவே இருந்து வந்திருக்கிறது.

உதாரணமாக, புத்தர், அசோகர் காலத்தில் ஏற்பட்ட மதக்கோட்பாடு மாறுதல்களும்; ரஷியா, ஸயாம் முதலிய நாடுகளுக்கு ஏற்பட்ட ‘சோவியத்லேண்ட்’, ‘தாய்லேண்ட் போன்ற பேர்களும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மற்றபடியாக சிறு ஊர்களுக்குப் பெயர் மாற்றுவதும் பெருந்தொகையாகப் பணம் வசூல்செய்து அதன்மூலம் சில பொதுநலக் காரியங்கள் செய்வதும் காந்தியாருக்கு நாம் ஏதோ நன்றி காட்டினதாகத்தான் வந்து முடியுமே தவிர, காந்தியாரால் உலகத்துக்கு நம் நாட்டுக்கு-அதாவது, மற்ற நாட்டாரால் தாழ்மையாகக் கருதப்பட்ட சரித்திரப் பிரசித்தமுள்ள நாட்டுக்கு ஏற்பட்ட மகா மேன்மையான காரியம் என்னவென்பதற்கு நல்ல ஆதாரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒருவரை மகான்-கிரேட் மேன்’ (Great Man) என்றால்-அவரால் ஏற்பட்ட நிரந்தரமான பெரிய காரியம் ஒன்று இருந்தாகவேண்டுமேயொழிய, அவர் காலத்தில் இன்னின்ன காரியம், அற்புதம், அதிசயம் நடந்தன என்பவை பிற்கால மக்களுக்குப் பயன்படுவதானதாக ஆகி விடாது. இது எனது தாழ்மையான அபிப்பிராயம்; கொள்ளவும், தள்ளவும், திருத்தவும், மாற்றவும் உங்களுக்குப் பூரண உரிமையுண்டு.

இதற்கு இது ஒரு நல்ல சமயம்: நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் ஒரு பாகமாகிய சிந்து’வுக்கு இன்று பாகிஸ்தான் என்ற பெயர் ஏற்பட்டிருப்பது போல் இந்தியாவின் பெயரும் மாற்றப்படலாம். இந்து என்பதும் இந்தியா என்பதும்-அன்னி யர்கள் நமக்கும், நம் நாட்டிற்கும் கொடுத்த பெயர். (அதுவம் சிந்து நதி காரணமாக ஏற்பட்ட பெயர்) என்பதை எல்லா அறிஞர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்; காந்தி யாரும் இதைச் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். இந்து மதம் என்பதாக ஒரு மதமும் இல்லை. ஆகவே, இந்தப்படியான மாற்றம் காந்தியார் உயிர்ப் பலியின் காரணமாக ஏற்பட்டுவிடுமானால் இனி இங்கு மத, சமுதாய, சாதி சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் கலபத்தில் காணமுடியாது. 30 கோடி மக்களும் ஞானவான்களாக-ஒரே சமுதாய மக்களாக உலகத்தின்முன் திகழ்வார்கள்.


-- குடிஅரசு -14.2.1948

காந்தியார் முடிவுக்குப் பின்- தோழர் பெரியார்

 காந்தியார் முடிவுக்குப் பின் 


மதவெறிகொண்ட மாபாதகக் கூட்டம் சதி செயல் புரிந்து, தந்திரமும் வஞ்சனையும் போர்த்து உலகப் பெரியாருள் ஒருவரான பெரியார் காந்தியாரைப் பலிகொண்டுவிட்டது; செய்தியைக் கேட்டுத் திகைத்தவர் பலர்; திகைப்பால் செத்தவர்கள் சிலர்; சாக விரும்பியவர்கள் சிலர் என்ற செய்திகளை எல்லாம் அவர் மறைந்ததிலிருந்து நாள்தோறும் கேட்டு வந்திருக்கின்றோம். மனிதத் தன்மை படைத்த எவருமே விரும்பாத, இழிவான இந்தப் படுகொலையைக்கண்டு, கேட்டு, எவருமே பதறாமல் இருக்கமுடியாது. கோட்ஸே கும்பல்கூட அல்ல; கோட்ஸேகூட மனம் பதறித்தான் இருப்பான், தன்னால் கொல்லப்பட்ட காந்தியார் குலைந்து மண்ணில் வீழ்ந்ததைக்கண்டு, ஏன்? அவனும் மனித உடல் போர்த்தவன்தானே. 




சுயநலம் கொஞ்சமும் இல்லாமல், தனது முப்பது ஆண்டு வாழ்க்கையையும் இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் நன்மைக்காகவே, தன் மனதில் எது நன்மை என்று பட்டதோ அவ்வழியிலேயே உழைத்த பெரியார் காந்தியார், பலாத்கார முறைகளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல் அகிம்சையையே தன் கருவியாகக் கொண்டவர். மத இயலில், மதத்திற்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர். கடவுள் இயலில், கடவுள் ஒன்றுதான் என்றும், அந்த ஒன்றைத்தான் பலரும் பலவாறு கூறிப் போனார்கள் என்றும், ஆனால் எல்லாவற்றையும், ஒன்றாகவேதான் நான் மதிக்கின்றேன் என்றும், விளக்கிக் கூறி கடவுள் வழிபாட்டிற்காக அமைந்த கோயில்களை “விபசார விடுதிகள்” என்று கூறி அங்கு தரகனோ, அந்தக் கடவுளுக்குப் பால், பழம், சோறோ வேண்டியதில்லை; திறந்த வெளியே போதும் என்றவர். அதாவது, விக்கிரக ஆராதனை கூடாது, பிரார்த்தனையே போதும் என்று வற்புறுத்தியவர். சமுதாய இயலில் ஒருவரை ஒருவர் சுரண்டுதல் கூடாது, பரம்பரையாக ஒருவர் உறிஞ்சிப் பிழைக்கவும், அதற்காக மற்றொருவர் நைந்து, வாழ்க்கை கசந்து வாழவும், அதற்காக ஒரு கூட்டம் ஒடுக்கப்பட்டவர்களாய்த் தாழ்த்தப்பட்டவர்களாய் இருந்து வருவது ஈனம் என்றும் வற்புறுத்தியவர். தேச இயலில் இந்தியத் துணைக்கண்டத்தை ஒரே நாடு என்றும், இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நாட்டினர் பட்டினர் என்றும் வற்புறுத்தியவர்.

இவ்வாறான காந்தியாருடைய பல கொள்கைகள், மத வேறுபாடு, ஜாதி வேறுபாடு நிரம்பிய இந்த நாட்டிற்கு அவைகளைத் தீர்க்க ஓரளவிற்குப் போதுமானவை என்று கூறத் தகுந்ததாயினும், அக்கொள்கைகளைப் பரப்புவதற்கு அவர் கையாண்டுவந்த முறைகள், நிச்சயமாக விபரீதமான பலனைத்தான் கொடுக்குமென  நாம் என்று அடிக்கடி வற்புறுத்தி விளக்கிக் கூறி வந்திருக்கின்றோம் என்பதையும், அதே நேரத்தில் அவரின் பல கொள்கைகள் இந்தப் பிற்போக்கான நாட்டிற்குத் தேவையானவை என்று உணரத தவறவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தின் நன்மைக்காக, பெருமைக்காக முன்னேற்றத்திற்காக உழைத்து வந்த பெரியார் காந்தியார் என்று சொல்லிக்கொள்ளக் தகுந்த நிலையிலிருந்தாலும், அவருடைய மறைவுக்குப் பிறகும் இந்த நாட்டில் வாழ்ந்தேயாக வேண்டிய மக்கள் எவ்வளவு தூரம் நன்மை, பெருமை, முற்போக்கு அடைந்திருக்கிறோம்? அடையாவிட்டால் அதற்குக் காரணம் என்ன? அடைவதற்கு நாம் என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்? என்பவைகளைப் பற்றி எண்ண வேண்டுமல்லவா? அவைகளை அடைந்தால்தானே உண்மையில் காந்தியாரின் கொள்கைகள் நிறைவேறியதாக, வெற்றி பெற்றதாக நாமும் சொல்லிக்கொள்ளமுடியும்; உலகமும் ஒப்புக்கொள்ளும். இந்த நாட்டின் பிற்போக்குச் சக்திகள் என்று காந்தியார் எவற்றைக் குறிப்பிட்டாரோ, அவற்றை ஒழிப்பதுதானே உண்மையாக அவரை மரியாதை செய்வதாக இருக்க முடியும். இதைத் தேசியத் திராவிடர்கள் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள, தேசியப் பல்வேறு இனங்களும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். 

காந்தியாரை எந்த இந்துமதம் ஒழித்ததோ, அதாவது எந்த இந்து மதம் காந்தியார் உயிருடன் வாழ்வது, தான் அழிந்துபோவதற்கு ஏது என்று கருதியதோ, அந்த இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவா அவருடைய மறைவு பயன்படுத்தப்படவேண்டும்? தான் பெரிய ஜாதியாய் இருந்துகொண்டே. மற்ற ஜாதியெல்லாம் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதியென்று சொல்லி, அவைகளை தலைநிமிரவொட்டாமல் தந்திரத்தாலும், வஞ்சகத்தாலும் சதிசெயல்புரிந்து, சாஸ்திரம் என்றும், சடங்கென்றும் கூறி ஏமாற்றி வாழ்ந்துவரும் எத்தர்கள் பிழைப்புக்காக இந்தப் பெரியாருடைய மறைவு பயன்படுத்தப்படவேண்டும்? அறிவற்ற மக்களின் மூடத்தனத்தைப் பெருக்கி, அவர்கள் அந்த மூடத்தனத்தில் இருந்து என்றும் மீளாத வழியாக பார்ப்பனியத்தின் காலைக் கழுவிக்குடித்து வாழும் ஜாதியாக என்றைக்கும் இருப்பதற்காகவா இந்தப் பெரியாரின் வஞ்சகமான படுகொலையை மறைத்து. வகையில் ஆடம்பரமாக, அநாவசியமாகப் பயன்படுத்தப்படவேண்டும்? 

காந்தியார் முடிவின் பிறகு நாம் நாட்டிலே என்ன பார்க்கின்றோம்? உலகம் எல்லா மூலைகளிலிருந்தும், அவரைப் பாராட்டி, அவர் முடிவுக்கு வருந்தி, அவரைச் சுட்ட கொலை பாதகப் பார்ப்பனனைக் கண்டித்து ஏராளமான செய்திகள் வெளியாகி விட்டன. ஒருவன் குற்றம் செய்தால் அவனும் அவனைச் சார்ந்த சொந்தக்காரர்களும், அவன் குலத்தினருமே ஒழிக்கப்படவேண்டும் என்ற இந்து மதத்தின் பழங்கால நீதியை, இப்பார்ப்பனன் இந்திய விஷயத்திலும் கையாளப்படவேண்டும் என்று நாம் கூறவில்லை; விரும்பவுமில்லை; அது கூறப்பட்டாலும், நியாயமுமில்லை. ஆனால், அவனை ஒழித்து விட்டு, அவன் அந்தச் சதிச் செயலைச் செய்ய எந்த இந்துமத வெறிவுணர்ச்சி காரணமாக இருந்ததோ, அந்த இந்துமத செழிப்புக்கான காரியங்களைச் செய்வதுதான் நீதியா? நியாயமா? என்று கேட்க ஆசைப்படுகின்றோம். இந்தப் படுகொலைக்கு எந்த இந்துமத சாம்ராஜ்ய தெரிந்து கொள்ளக் கூடியதாய் வெறியுணர்ச்சி காரணமாக இருந்ததோ, அந்த இருக்க முடியும். உணர்ச்சியை ஆழக்குழி தோண்டி, சுட்டுப் பொசுக்கி, சமாதி வைப்பதல்லவா நீதியான செயலாக இருக்க முடியும் என்று கூறவும் ஆசைப்படுகின்றோம். 

அவர் மறைந்த பதின்மூன்றாம் நாள், அவருடைய சாம்பல்களை எல்லாம் இந்த நாட்டின் “புண்ணிய நதிகளில் கரைத்து விடப்பட்ட ஒரு சடங்கையும், அதைப் பக்தி விசுவாசமாகப் பலர் பார்த்துத் தரிசித்துச் சென்றனர் என்ற விளம்பரச் செய்திகளையும், அதை அங்கங்கே உள்ளவர்கள் அவைகொண்டு போகப்பட்டபோதும், கரைத்தபோதும் ஏராளமாகக் கண்டு வணங்கிச் சென்றனர் என்ற செய்திகளையும் பார்க்கும்போது நாம் பெரிதும் வருத்தமடைகின்றோம். காந்தியாரின் படுகொலை விளைவித்த வருத்தத்தைக் காட்டிலும், அவருடைய முடிவு இந்தப்படி சித்திரவதைச் செய்யப்படுவது, நமக்கு மட்டுமல்ல பகுத்தறிவுடைய எவருக்கும் அதிக வருத்தத்தையே உண்டு பண்ணும் என்னலாம். 

இந்தச் செயலால் மக்களுடைய காலமும், பொருளும் வீணாகக் கழிந்தன என்றுகூட நாம் குறிப்பிட ஆசைப்படவில்லை. ஆனால், விலைமதிக்க முடியாததான மக்களின் அன்புணர்ச்சி - காந்தியார் படுகொலையைக் கேட்டுத் திகைப்படைந்து இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும் என்று பிறந்த தெளிவுணர்ச்சி - காந்தியாரிடத்தில் நாம் மரியாதையுடையவர்கள் என்று காட்டவேண்டும் என்று தோன்றிய நன்றியுணர்ச்சி, பரிதாபமான முடிவைக் கேட்டு நம் மீது அதிகமான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. சமுதாய முன்னேற்றத்திற்கு நம்மாலான தொண்டைச் செய்தேயாகவேண்டும் என்று உண்டான வீரஉணர்ச்சி, "காந்தியார் எலும்பைக் கண்டு தரிசித்தோம்", "ஆற்றில் சாம்பலைக் கரைக்கும்போது அந்த அருமையான காட்சியைக் கண்டு களிப்டைந்தோம்" "இதற்காக எவவளவு கஷ்டப்பட்டு எப்படி எப்படியெல்லாமோ போய் ஏதோ ஒரு மாதிரியாய்ப் பார்த்து வணக்கத்தைச் செலுத்தி விட்டோம்" என்று எண்ணி மனத்திருப்திப்படும் அளவிலா மனதிலுண்டான நல்லுணர்ச்சிகள் எல்லாம் கரைத்து விடப்படவேன் என்று கேட்கிறோம். காந்தியார் எலும்பையே காவிரி நதியிலும், மற்ற நதிகளி கொண்டு போய்க் கலப்பது புண்ணியமென்றால், அந்த நதிகளில் நம் முன்னோர் எலும்பையும், சாம்பலையும் கொண்டு போய்க் கலப்பது தானே புண்ணியமானதாகும்; இந்த ஏற்பாடுதானே புனிதமானது என்கிற முடிவைத்த இந்தச் செயல் மற்ற மக்களைக் கொள்ளச் செய்யும். அஸ்தியை ஆற்றில் கரை அய்யருடைய உதவி தேவை என்கிற முடிவில், பார்ப்பனர் வகுத்த சாஸ்திரங்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்பு பராமரிப்பதற்குத்தானே இந்த நடவடிக்கை பயன்படுவதாக இருக்க முடியும்? இந்திய யூனியன் மதமற்றது என்று கூறப்பட்டாலும் அது இந்து மதத்தைப் பின்பற்றியே நடக்கக்கூடியது என்கிற உண்மையைத் தானே அரசாங்கம் காட்டும் ஆதரவிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளக் கூடியதாம் இருக்க முடியும்? 

இதுதானா காந்தியாருக்குச் செய்யும் நன்றி - மரியாதை? இவ்வாறு தரிசிப்பதும் மலர் மாலை சாத்துவதும் ஆன காரியங்களால் அவருடைய கொள்கைகள் நிறைவேரி விட்டன என்று கூற முடியுமா? 

இயற்கையை ஏவல் கொண்டு, விரும்பியபடி எல்லாம் ஆட்டிவைக்கும் விஞ்ஞான முறையும் அதன் பயனாய்த் தோன்றிய இயந்திரங்களும், இங்கு இன்றைக்கும் வணக்கத்திற்குரியதாக இருக்கிறதேயன்றி வாழ்வின் நலனுக்காகக் கொள்ளப்பட்டது என்று சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கின்றோம். அறிவு உயர்ந்தது; அறிவைப் பெருக்குவது கல்வி; கல்வியைத் தருவது ஏடு. அந்த ஏடு வணக்கத்திற்குரியதாகவே இந்த நாட்டில் இருந்து வருகிறது என்று சொல்லலாமே தவிர, அந்த ஏட்டின் பயனைக் கண்டு அறிவு பெருகி வாழவேண்டும் என்ற போக்கைக் காணோமே? எது எது உயர்ந்தது என்று சொல்லப்படுகின்றதோ அதெல்லாம் வணக்கத்திற்குரியது; பூஜைக்குரியது என்கிற மனப்பான்மை இந்த நாட்டில் வேரூன்றி, வாழ்வில் அவைகளை ஏற்று நடக்கும் தன்மை இல்லாமல் போனதால்தானே, இந்தப் பழம் பெருமை வாய்ந்த நாடு கேடுகெட்ட நாடாக மாறிவிட்டது? சாரத்தை விட்டுவிட்டுச் சக்கையை ருசி பார்க்கும் நடவடிக்கைதானே பல காலமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. அந்தப் போக்கைத்தானா இப்பொழுதும் மேற்கொள்ள வேண்டும்? என்று கேட்கிறோம். 

பார்ப்பனிய மதமான இந்து மதம் என்கிற கொடிய பாம்பிற்குக் காந்தியார் பாலூற்று வளர்த்து வந்தார். அப்பாம்பின் கொடுமையைப் பற்றி நாம் அவருக்கு அதிகமாகவே எடுத்துக் கூறினோம். சுயராஜ்யம் என்ற மகுடியை ஊதி வந்ததால், அதுவும் ஆடிப்பாடிய குதித்ததால், அதையடக்கிக் தன் வழிச் செலுத்தலாம் என்றே காந்தியார் முழுக்க முழுக நம்பினார். சுயராஜ்ய மகுடியை ஊதாத நேரத்தில் - ஊதத் தேவையில்லை என்று அவ கருதிய வேளையில், அப்பாம்பு தன் விஷப் பற்களுக்கு அவரையே இரையா கொண்டு விட்டது. இப்பொழுது அந்தப் பாம்பை என்ன செய்வது என்ற கேள்வி? நாம் நசுக்கி அழித்துவிட வேண்டும் என்றுகூடச் சொல்லவில்லை, அதனுடை விஷப்பற்களை மட்டும் பிடுங்கி எறிந்துவிட வேண்டும். இதைத்தான் இங்கு வற்புறுத்து சொல்ல ஆசைப்படுகின்றோம். இதற்கு வழியென்ன? 

அவருடைய நினைவாகப் பெரும் பொருளை நிதியாகச் சேர்த்து கஸ்தூரிபாய் நிதி போலவும், கமலா நேரு நதிபோலவும் சில பொதுக் காரியங்களுக்குச் செலவு செய்து விட்டால், அது உண்மையாகவே அவருக்குத் தகுந்த ஞாபகார்த்தமாக விடுமா? அவருடைய உருவச் சிலைகளை அங்கங்கே வைத்துப் பூஜை நடத்தி வருவதினால் அது அவருடைய தொண்டைச் செய்ததாக முடியுமா? காந்தியார் கழகம் என்று பெயர் வைத்து அவர் எழுதியவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து (காலப் போக்கில் பார்ப்பனியப் பிடியில் சிக்கி நல்லதையெல்லாம் சுட்டெரித்துவிட்டு மாற்றித் திருத்தி  வைத்துக் கொண்டு) வெறும் வேதாந்த விசாரணையில் ஈடுபட்டால் அது அவடைய கொள்கைகளைப் பரப்பியதாக ஆகுமா? அவர் எப்படி உண்ணாவிரதமிருந்தாரோ, மவுன விரதமிருந்தாரோ அவைகளை நாங்களும் எங்கள் வாழ்க்கையில் பின்பற்றப் போகின்றோம் என்று சிலபேர் முடிவு கட்டுவதால், அது பலருக்கு உண்மையாகவே நன்றி காட்டியதாக ஆகுமா? அவருடைய நினைவுக்கு அறிகுறியாக போஸ்டல் முத்திரைகளை அச்சிட்டு வெளியிடுவதோ, அதைப்போன்ற செயல்களைச் செய்வதோ காந்தியாரின் கொள்கைகள் இந்த நாட்டில் நிலைபெறுவதற்கு வழி செய்யும் காரியங்களாகுமா? வெறும் பஜனைபாடும் அளவிலும், பால் பழம் பூ வைத்து நைவேத்தியம் செய்யும் அளவிலும் நின்றால், அவர் உயர்ந்தவர், ஒரு பெரியார், ஒரு மகாத்மா, ஒரு மகான் என்று பெருமையாகப் பேசிக் கொள்வதற்குப் பேருதவியாக இருக்குமே தவிர, அவரால் இந்த நாட்டிற்கு நிலையான பயனேற்பட வழிசெய்ததாக ஆகுமா? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? 

பார்ப்பனியத்தை வளர்ப்பதற்கென்றே தோன்றி, அதைப் பராமரித்து இப்பொழுது முடிவுப் பாதையில் விரைவாகப் போய்க் கொண்டிருக்கும் இந்து மதமே, இந்த நாட்டின் சிதைவுக்கு மூலகாரணமென்று உணர்ந்து, அதை விட்டொழிப்பதே மனிதன் மனிதனாக வாழ்வதற்குச் செய்யப்பட வேண்டியதென்று விளக்கித் தங்களுக்கும், இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைக் காட்ட தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளும் திராவிடர் பெருமக்களின் தந்தை பெரியாரவர்கள், இந்த நேரத்தில் மிகமிக அருமையான யோசனையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை ஆச்சாரியார், நேரு, பட்டேல் முதலியவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அதை நாம் மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கின்றோம். அதனை ஆழ்ந்து படித்து, அதாவது எழுத்தெண்ணிப் படிப்பது என்று கூறுவார்களே. அந்த முறையில் படித்து இந்த மாதிரியான திட்டம் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு சமுதாய ஒற்றுமைக்கு - நாட்டின் நலத்திற்கு - உலகம் உள்ளவரை உலகத்தில் எங்குமே மறைந்து விடாதபடி காந்தியாரின் நிலையான அறிகுறியாக இருப்பதற்கு - ஏற்றதுதானா? செய்யப்படவேண்டியதுதானா? என்பதை தர சிந்தித்து பார்க்கும்படியாக காந்தி பக்தர்களையும் தேசிய தலைவர்களையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறோம். 

இந்தியத் துணைக்கண்டம் என்று கூறப்படுவதாய், பலவேறு நாடுகள், பலவேறு மதங்கள் என்று பிரிந்து பலவேறு கேடுகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் துணைக்கண்டம் ஒரே நாட்டினர், ஒரே வகுப்பினர், ஒரே மதத்தினர் என்று கூறத்தக்க நிலையில் பலவேறு முற்போக்குக்களையும் அடைய உண்மையாகவே உங்களுக்கு அக்கறையிருக்கிறதா? ஆசையிருக்கிறதா? அந்த நல்ல காரியத்திற்கு மக்களின் வன்புணர்ச்சி - தியாகவுணர்ச்சி - நன்றி உணர்ச்சி வெள்ளத்தைத் திருப்பி விடுவதற்கு வழி வகுத்திடுங்கள் ! அதற்குத் துணை செய்யும் முறையில் காந்தியாரின் ஞாபகச் சின்னம் பயன்படட்டும் ! அது நிரந்தரமானதாய் நிலைத்திருக்கட்டும் ! அதே நேரத்தில், மிகவும் அற்புதமான நன்மையான பயனை உண்டாக்குவதாகவும் இருக்கட்டும் ! என்று பெரியாரவர்கள் விரும்புவதைப் போலவே நாமும் விரும்புகிறோம். 


-- குடி அரசு - தலையங்கம் - 14.2.1948


காந்தியார் இடத்தை நிறைவு செய்ய, இந்த நாட்டில் எவரும் இல்லை

 காந்தியார் இடத்தை நிறைவு செய்ய, இந்த நாட்டில் எவரும் இல்லை 

பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார் மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது லட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன. 

காந்தியார் மீது நடத்தி இருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும் பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடந்து கொண்ட காந்தியார், இக்கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றால் இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப்படைக்கும் சதிகாரச் கூட்டம் ஒன்று திரைமறைவில் வேலை செய்து வரவேண்டும். வட இந்தியாவில் நடைபெற்று வரும் கலவரங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமாய் இருப்பது மதவெறியேயாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மதவேறுபாடுகளை மறந்து, சகோதர பாசத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலவ வைப்பர். 

(தோழர் காந்தியார் கொலையுண்ட செய்தி கேட்டு, திராவிடர் கழகத்தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் விடுத்த அறிக்கை )

-- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 07.02.1948

காந்தியாரைக் கொன்றவன் பெரிய சாதிப் பார்ப்பனன்

 பெரியார் காந்தியாரைக் கொன்றவன் பெரியசாதிப்பார்ப்பனன் 


நான் நாதுராம் வினாயக் கோட்ஸைவை பூனாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் முஸ்லிம்களின் பரம விரோதியாகக் காணப்பட்டார். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் பிரஜாவுரிமைகள் பறிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து அவர் தர்க்கரீதியாக என்னிடம் வாதித்தார். தோழர் கோட்ஸ் உயர்சாதிப் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். ஹிந்து ராஷ்டிரா என்ற தீவிரத் தேசியப் பத்திரிகையின் ஆசிரியருமாவார். அவரது வாதமாவது: 

"இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் எய்தப்பெற ஜின்னாவையும் முஸ்லிம் லீக்கையும் ஆதரித்து வந்தனர். இப்பொழுது அவர்கள் பாகிஸ்தான் அடைந்து விட்டார்கள். எனவே, அவர்கள் ஹிந்துஸ்தான் விட்டு வெளியேறி விட வேண்டியதுதானே முறை. தாய்நாடு பிளவுண்டதற்கு இந்து சமுதாயம் தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளப் போவது உறுதி. இந்தியா முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டு விட்டது'. 

மகாராஷ்டிரர்களின் பழங்காலக் கீர்த்தி பற்றித் தோழர் கோட்ஸ் பேசுகையில் அவரது கண்களில் வெறியுணர்ச்சி தாண்டவமாடியது. 

கோபக்கனல் பொங்க ஆத்திரக் குரலில் தோழர் கோட்ஸ் காந்தியாரைக் கொடூரமாகச் சபித்து, என்னை விட்டுப் பிரிந்தார். எதுவும் பேச எனக்கு நாவெழவில்லை. 

இவ்வாறு தோழர் தாமன்கார் என்பவர், லண்டன் “ரெய்னால்ட்ஸ் நியூஸ்” பத்திரிகையில் குறிப்பிடுகிறார். 

-- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 07.2.1948


காந்தியார் முடிவு - தோழர் பெரியார்

 காந்தியார் முடிவு 


"உலக மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கு ஆக 125 வயது வரை நான் உயிருடன் வாழ்ந்து வருவேன்" என்று கூறிக் கொண்டே, அதற்கு ஏற்ற வண்ணம் உடலையும் பாதுகாத்துக் கொண்டே, பெருவாரியான மக்களின் போற்றுதலையும், பாராட்டுதலையும் பெற்று அதற்கு ஆக உண்மையாய் உழைத்து வந்த மகான் காந்தியார், தனது 79ஆம் ஆண்டில் அகால மரணத்தால் முடிவெய்தி விட்டார். 



இவரது முடிவைப் போல், கேட்டதும் மக்களுக்குத் திடுக்கிடும் தன்மையும், அலறிப் பதறித் துடிதுடித்துத் துக்கப்படும் தன்மையும் இதுவரை நம் நாட்டிற்கு வேறு எவருடைய முடிவும் தந்ததில்லை என்பதோடு, இப்படிப்பட்ட இவரே இக்கதிக்கு ஆளான பின்பு இனி எவர் எக்கதியானால் தான் என்ன? என்றும் கூறலாம். 

காந்தியார் கொள்கையில் அதிருப்தி கொண்டவர் சிலர் ஏன் பலர் இருக்கலாம் என்றாலும், அப்படிப்பட்டவர்களும் காந்தியாரிடத்தில் மரியாதையும், அன்பும் வைத்தவர்களாகவே இருந்தார்கள். 

கம்யூனிஸ்ட்டுகளும், சமதர்மவாதிகளும், காந்தியார் கொள்கையில் எவ்வளவு குறை கண்டாலும், அவரிடத்தில் மதிப்பும், மரியாதையும் வைத்தவர்களாகவே இருந்து வந்தார்கள். வெள்ளையர்கள் மீதில் இந்தியர்களுக்கு எப்படிப்பட்ட குரோத மனப்பான்மை ஏற்பட்ட காலத்திலும், வெள்ளையர் அரசாங்கம் காந்தியாரை மதிப்பதிலோ, அவரைப் பாதுகாப்பதிலோ சிறிதுகூடத் தவறியதில்லை. அனுபவத்திற்கு ஏற்றதோ ஏற்காததோ என்ற கவலையற்று, காந்தியார் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியவாதியாகவே இருந்த பெரியாராவார். ஆதலால், அவரிடத்தில் சொந்த விருப்பு வெறுப்புக் கொண்டு யாவரும் அவரை வெறுத்ததில்லை. 

திராவிடர் கழகத்தாருக்கும் காந்தியாரிடம், அவர் வருணாச்சிரம தர்மத்தைக் காப்பதில் பிடிவாதமான கவலை கொண்டிருக்கிறாரே என்பது தவிர, மற்றக் காரியங்களில் அவருடன் பிரமாதமான முரண்பட்ட கருத்துக்கொண்டிருக்கவில்லை என்பதோடு, அவர்கள், “காந்தியார் கூடிய சீக்கிரத்தில் இந்த விஷயத்திலும் சரிப்பட்டு விடுவார்கள் என்றே கருதி, அதை மாத்திரமே முக்கியமாய்க் காந்தியாருக்கு எடுத்துக் கூறிக் குறிப்பிட்டு வந்தார்கள்.

இந்துஸ்தானிலிருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியவேண்டும் என்பதிலும் காந்தியாருக்குப் பிடிவாதமில்லாமலேயே இருந்து வந்தது என்றாலும், அவரது நண்பர்களான மார்வாடிகள், குஜராத்திகளின் தாட்சணியம் காரணமாக மாத்திரமே, அது விஷயத்தில் தனது, அதிருப்தியைக் காட்டி வந்தார். எப்படி இருந்த போதிலும் திராவிடர் கழகத்தாருக்குள் ஒரு சிலருக்குக் காந்தியார் நட்புப் பெறவும், அவரிடம் 

தங்கள் கொள்கைக்கு ஆதரவு தேடவும் ஆசை துடித்துக் கொண்டிருந்தது. 1948ஆம் ஆண்டு முடிவதற்குள் இது விஷயத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த மாறுதல் கூட திராவிடர் கழகத்தில் ஏற்படலாம் போல் நிலைமை இருந்தது. 

இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு பார்ப்பனப் பாதகன், மதவெறி காரணமாகக் கொடுஞ்செயல் செய்து தனது ஜாதிக்கே நீங்காப் பழியையும், மாசையும் உண்டாக்கிக் கொண்டான். காந்தியார் எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாகக்கூடியவர் என்பதில் யாருக்கும் அய்யமில்லை . அவர் இளம் வயது உடையவருமல்ல. 80 வயதுடையவராய், உலகப் பெரியாராய், உத்தமராய் வாழ்ந்து விட்டார். அவர் அடைந்த சுகபோகம், ராஜ உபசாரம் என்பவை போதுமானதற்கு மேல் என்றே சொல்லலாம். மற்ற எவருக்கும் இதுபோல் சுலபத்தில் கிடைக்கக்கூடியதல்ல என்றும் சொல்லலாம். அவர் மக்களுக்குச் சொல்லவேண்டியவைகளை எல்லாம் சொல்லிவிட்டு அதுபோல் நடந்து காட்டவும் செய்தார். அவர் சாகும்போது அவருக்கு நினைவு, உணர்வு இருந்து இருக்குமானால், "கடவுள் என்னை அழைக்கிறார்'' என்று கருதித் திருப்தியுடன் தான் உயிர்விட்டிருப்பாரே ஒழிய, சிறிதும் அதிருப்தியாய் உயிர்விட்டிருக்கமாட்டார். 

என்றாலும், நடந்தது என்ன என்று பார்ப்போமேயானால், அவர் குறிப்பாக எந்த ஜாதி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்து, எந்த ஜாதி மக்களை - "பிட்சாந்தேஹி” என்கின்ற உஞ்சவிருத்திக் கூட்டமாக இருந்து வந்தவர்களை - இன்று உயர்வாழ்வில் இருத்தி நாட்டை அவர்களது ஆட்சிக்கும், ஆக்கினைக்கும் உள்ளாக்கிக் கொடுத்தாரோ, அந்த ஜாதியே இன்று அவரை அழித்து விட்டதே என்பதுதான் இதில் ஆத்திரம் கொண்ட பரிதாபத்தோடு சிந்திக்க வேண்டியதாயிற்று. 

உண்மையில் பிராமண (பார்ப்பன) ஜாதி என்பதாக ஒரு ஜாதி, அந்த ஜாதியின் நலனுக்கு ஆக, அதுவும் மற்ற ஜாதிகளை இழித்து, அழுத்திக் கசக்கிப் பிழிந்து, தாங்கள் மாத்திரம் நல்வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கின்ற கருத்துக்கு ஆக மாத்திரம் அல்லாமல், மற்றபடி வேறு எந்தக் காரியத்திற்கும் அந்த ஜாதி உலகத்துக்குத் தேவையே இல்லாத ஜாதியாகும். அப்படிப்பட்ட ஜாதியை அது ஒழியப்போகும் தருணத்தில் காப்பாற்றி அந்த ஜாதியாருக்குப் பொருந்தாத ஏற்றத்தைத் தந்து நிரந்தரமாய் நல்வாழ்வு வாழ வகையளித்தார். அப்படிப்பட்ட அந்த ஜாதிப் பாதகரே, அதற்குப் பிரதி உபகாரமாக இப்படிப்பட்ட பழிபாவத்திற்கு அஞ்சாத மகாபாதகமான காரியம் செய்தார் என்பது இது அவருடைய - அவ்வொருவருடைய செய்கையாக மாத்திரம் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் முடியவே முடியாது. இதை “ஜாதி தர்மம்” என்றுதான் சொல்லவேண்டும். 

புத்த தர்மம் கெட்டது யாரால்? சமண தர்மம் கெடுக்கப்பட்டுச் சமணர்கள் கழுவேற்றப்பட்டது யாரால்? மற்றும் பாதகமானதும் வஞ்சனையானது என்று திரும்பவும் கேட்கிறோம். மாகிய பல கொடுஞ்செயல்கள் புராண காலத்திலும், சரித்திர காலத்திலும் நடந்ததாகக் காணப்படுபவை யாரால் நடந்தவை? 

இவை போன்றவைகளைக் கூர்ந்து கவனிப்போமேயானால், காந்தியார் போன்ற பெரியார்கள் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ, சிறிதும் ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம். இதற்கு ஆக பார்ப்பன ஜாதியை குறைகூறுவது முற்றும் சரியானதாகி விடாது. அவர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்கு ஆக ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் மதக் கற்பனைகளே, இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும் விளைநிலமாக இருந்து வருகிறது. உண்மையிலேயே, மதமாற்சரியம், வகுப்பு மாச்சரியம், இனமாச்சரியம் முதலிய துவேஷங்களுக்குப் பார்ப்பன மதம் தவிர, மற்றபடி இந்த நாட்டில் வேறு காரணம் யாராவது சொல்ல முடியுமா? தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரை நாம் குற்றம் கூறக் கூடும்? என்று கேட்கிறோம்.

நன்றாக ஆழ்ந்து நிதான புத்தியுடன் கூர்ந்து சிந்திப்போமானால், “வெள்ளையன் ஆட்சி கூடாது'' “முஸ்லிம் ஆட்சி கூடாது'' என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும், அதனால் குரோதம், துவேஷம் ஏற்படவும், அதனால் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, நாசம் ஏற்படவும் பார்ப்பன மதம் காரணமல்லாமல், வேறு ஏதாவது கொள்கைகள், திட்டங்கள், ஆட்சி தர்மங்கள் காரணம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? சொல்லக் கூடுமானால் வெள்ளையன் ஆட்சியும், முஸ்லிம் ஆட்சியும் ஒழிந்தன. இந்துஸ்தான் சுயஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும், இந்து முஸ்லிம் போராட்டம் என்னும் பேரால் இந்த ஒரு ஆண்டுகாலமாக நடந்துவரும் அட்டூழியமான நடத்தைகள் நடப்பதற்குப் பார்ப்பன மதம் காரணமல்லாமல், வேறு காரணம் என்று யாராலாவது எதையாவது சொல்லமுடியுமா? 

திராவிட நாட்டில் இதுபோது நடந்துவரும் திராவிடர்-ஆரியர் நாடு பிரிவினைப் போராட்டங்களுக்கும், பார்ப்பன மதம் காரணம் என்பதல்லாமல் வேறு காரணம் ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மததர்மம் காந்தியாரைக் கொன்றதில் அதிசயமென்ன? என்று திரும்பவும் கேட்கிறோம். 

பார்ப்பனிய மதக் கொடுமைக்கு திராவிட நாட்டில் எப்படியோ ஒரு விதத்தில் இதுவரை இப்படிப்பட்ட பாதகங்களுக்கு இடமில்லாமல் பலரால் பல காரியங்கள் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், பார்ப்பனர்கள் இனி  சும்மா இருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. 

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும் தமது பார்ப்பன மதத்தைக் காப்பாற்றத்தான் அரசியலில் கலந்து கொண்டும், பத்திரிகைகள் நடத்திக் கொண்டும், காந்தியார் முன் ஆஷாடபூதி மறைத்தும் வேஷம் போட்டுக் கொண்டு தக்களி சுற்றுவதும், கதர் கட்டிக் கொள்வதும், கோணல் குல்லாயை போட்டுக் கொள்வதும், தேசியக் கொடி பிடித்துக் கொண்டு காங்கிரஸ் பித்தர்கள் போல் நடிப்பதுமாய் இருந்து வந்தார்களே ஒழிய, நாட்டுப் பற்றால் என்றோ, மக்களுக்கு விடுதலை ஏற்பட வேண்டும் என்ற விடுதலை வேட்கையால் என்றோ, எந்தப் பார்ப்பனரையாவது அவர்களது எந்த நடவடிக்கைகளையாவது சுட்டிக் காட்ட முடியுமா என்று கேட்கிறோம். 

வடநாட்டில் காந்தியாரை வீழ்த்தியதன் பயனாய் பார்ப்பனர்களின் செல்வாக்கு ஒரு அளவுக்கு இந்த நாட்டிலும் இனி குறைந்துதான் தீரும் என்பதோடு, இந்து முஸ்லிம் போராட்டமும் பெரும் அளவுக்கு அடங்கித்தான் தீரும் என்பதை உணர்ந்த தென்னாட்டுப் பார்ப்பனர்கள், இங்கு திராவிட மக்கள் மீது அவ்வஞ்சகத் தன்மையைத் திருப்ப இப்போதே துவங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம். 

முதலாவதாக தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் காந்தியாரை சுட்டவன் பார்ப்பான் என்பதை வேண்டுமென்றே மறைத்து, மக்கள் முஸ்லிம்கள் மீதும், காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் மீதும் பாயும்படியான மாதிரியில் அயோக்கியத்தனமாக மறைத்தும் திருத்தியும் பிரசுரித்தார்கள். அதுமாத்திரமா என்று பார்த்தால், திராவிடர் கழகத்தார் மீதும் துவேஷம் ஏற்படும்படி இரட்டை அயோக்கியத்தனமாக, "கருப்புச் சட்டைக்காரர்களின் கலாட்டா' என்ற தலைப்புக் கொடுத்து மக்களை அவர்கள் மீது கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இந்தக் காரியத்தைச் "சுதேசமித்திரன்" பத்திரிகையே முதன்முதலாக தைரியமாய்க் கையாண்டிருக்கிறது. உண்மையாக, இந்த நாட்டில் “இந்து'', "சுதேசமித்திரன்'' என்ற இந்த இரண்டு பேயாட்ட வெறிகிளப்பும் விஷமப் பத்திரிகை இல்லாமல் இருந்திருக்குமானால், இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ அந்நியோன்ய பாவமடைந்து, ஞானமும், செல்வமும், ஆறாகப் பெருகும் நன்நாடாக ஆகி லலாண்டுகள் ஆகியிருக்கும், இன்றைய கலவரங்களிலும், கேடுகளிலும், நாசங்களிலும் 1000இல் 999 பாகமும் இல்லாமல் இருந்திருக்கும். 

இப்பத்திரிகைகள் தங்கள் ஜாதியார் செய்யும் அயோக்கியத்தனங்களை எல்லாம் பாதுமக்கள் ஆத்திரம்" என்று போட்டுவிட்டு, (கருப்புச்சட்டைக்காரர்கள் சயதார்களோ இல்லையோ) கருப்புச் சட்டைக்காரர்கள் நடத்தையைக் குறிப்பிடும்போது “கருப்புச்சட்டைக்காரர்கள் கலாட்டா” என்று போடுவதின் - அதுவும் இந்தச் சமயத்தில் போடுவதின் காரணம் வேறு என்னவாய் இருக்க இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும் “இந்து”, “சுதேசமித்திரன் என்னும் இந்த இரண்டு விஷ ஊற்றும் ஒழிக்கப்பட்டால் ஒழிய, மக்கள்' துவேஷம், குரோதம், வஞ்சகம் என்னும் விஷ நோய்கள் நீங்கப் போவதில் என்று உறுதியாய்க் கூறுவோம். இந்த சமயத்தில் பார்ப்பனர் செட் அயோக்கியத்தனங்கள் ஏராளமாக இருக்கும்போது அவைகளை மறைத்து, சுட்ட ஜாதியைக் கூட மறைத்து விட்டு "கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா” என் எழுதுவதானது, சர்க்கார் அடக்குமுறையைப் பார்ப்பனர் பக்கம் திருப்புவதை விட்டு கருப்புச் சட்டைக்காரர் பக்கம் திருப்புவதற்கல்லாமல் வேறு எதற்கு ஆக இரும் முடியும்? இந்தப்படி செய்த மற்ற கூட்டத்தினருக்குப் பெயரைக் கொடுத்து அது பிரசுரித்ததா?

இப்படிப்பட்ட யோக்கியர்கள் உள்ள நாட்டில் எப்படி ஜாதி, வகுப்பு, ஒற்றுமை இருக்க முடியும்? மேலும் மேலும் துவேஷம், பிரிவு, ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் "கருப்புச் சட்டைக்காரர் கலாட்டா'' என்று எழுதினால், அதன் உள்மர்மம் என்னவாய் இருக்க முடியும்? 

எனவே, பார்ப்பனிய விஷம மதம் அழிபட்டாலொழிய சாந்தியும், சமாதானமும் இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும் அருமையாகத்தான் இருக்கும். கடவுள் இருப்பதாலேயே, மதம் இருப்பதாலேயே இக்கேடுகள் நிகழ்கின்றன என்று நாம் சொல்ல வரவில்லை. உலகில் மற்ற பாகங்களில் உள்ள அளவுக்கு அவை இங்கும் நன்றாய் இருக்கட்டும். ஆனால், வருணாச்சிரம தர்மப் பிரிவு கொண்ட பார்ப்பன மதம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். அது உள்ளவரை நாட்டில் இன்றுள்ள கேடுகள் எல்லாம் இருந்துதான் தீரும். 

பண்டித நேருவும், இராஜகோபாலாச்சாரியாரும் எவ்வளவு தியாகிகளாகவும், யோக்கியர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்தாலும், அவர்கள் இந்த வர்ண தர்மத்தை வைத்துக் கொண்டு எப்படிப்பட்ட நல்லாட்சியைக் கொண்டு வந்தாலும், அதில் காந்தியாருக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் - ஏன் நமக்கும்கூட ஏற்பட்டுத்தான் தீரும். பார்ப்பன மதம் அவ்வளவு விஷத்தன்மை கொண்ட மதமாகும். ஏன் இப்படிச் சொல்லுகிறோமென்றால், பர்மாவில் சுயராஜ்யம் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்துவிட்டது. இலங்கையில் சுயராஜ்யம் அவ்விடத்திய மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்துவிட்டது. எப்படிச் செய்ய முடிந்தது என்றால், அங்கு வருணாச்சிரம ஜாதி முறை இல்லை. பார்ப்பான் இல்லை; இந்துக்கள் நாட்டில் - இந்துஸ்தானில் சுயராஜ்யம் வந்து என்ன செய்தது? காந்தியார் உயிரைப் பலி வாங்கி விட்டது. ஏன் என்றால் இங்கு வருண ஜாதியும் பார்ப்பானும் உண்டு. இனியும் என்ன என்ன செய்யப்போகிறதோ இவை? இன்றைய சுயராஜ்ய ஆட்சி மந்திரிகளில் - ஒருவர் மது மற்றொரு மந்திரி சந்தேகப்பட்டுக் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார். அதாவது போதுமான பாதுகாப்பு முயற்சி எடுத்துக் கொள்ளாததாலேயே, உள்நாட்டுக் கலகமும் காந்தியார் கொலை பாதகமும் ஏற்பட்டது என்று பண்டித நேரு பாதுகாப்பு மந்திரி மீது குற்றமேற்படும்படி சொல்லுகிறார். நேருவின் நண்பரும் சமதர்மக் கட்சித் தலைவருமான தப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் வெட்ட வெளிச்சமாகவே இதை "பாதுகாப்பு 

மந்திரி (சர்தார் பட்டேல் அவர்கள்) அந்தப் பாதுகாப்பு இலாகாவுக்குத் தகுதி அற்றவர் என்று சொல்லுகிறார். பொதுமக்களும் இந்தக் கொலைக்குச் சர்தார் மீதும் பழிபோட இடமிருக்கிறது என்றே கருதுகிறார்கள். காந்தியாரும் உயிருடன் இருக்கும்போது “எனக்கும் பட்டேலுக்கும் விரோதம் இருப்பதாகக் கருதாதீர்கள்” என்று சொல்லி அவர் மீது மக்களுக்கு உள்ள தப்பபிப்ராயத்தை மாற்ற முயன்று இருக்கிறார். சர்தார் பட்டேல் அவர்களும் "காந்தியார் பட்டினியின் போதே செத்து இருந்தால் நன்மையாக இருந்து இருக்கும்” என்று தனது துக்கச் சேதியில் நுழைத்துச் சொல்லி இருக்கிறார். இதன் காரணமாய் மந்திரிகளுக்குள்ளும் அபிப்பிராய பேதம் வலுத்து மந்திரி சபையில் மாற்றமோ, கோளாறோ ஏற்பட்டாலும் ஏற்படலாம். 

ஆகவே, பண்டித நேரு அவர்களும், ராஜகோபால ஆச்சாரியார் அவர்களும், அவர்கள் விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக் கொள்ளுவதற்கு முன்போ, இல்லையானால், இனி இப்படி நேராமல் இருக்கப் பாதுகாப்பு முறைகள் கையாளுவதற்கு முன்போ "காந்தியார் பலியாக்கப்பட்டதின் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை முறை இனி கிடையாது. வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்தச் சுயாஜ்யத்தில் இனி அனுஷ்டிக்கப்பட மாட்டாது. இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும்” என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்துவிடுவார்களேயானால், இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும், ஒரே அடியாய்த் தீர்ந்துவிடும். இதைச் செய்த உடனே அப்புறம் ஒரு உத்தரவு போட்டுவிடலாம். அதாவது "பிறவி ஜாதிமுறை எடுபட்டு விட்டதால் இனி இந்த நாட்டில் பிராமணர் பாதுகாப்புச் சங்கமோ, பிராமணர் சேவா சங்கமோ, வன்னிய சத்திரியர் மகாஜன சங்கமோ, நாடார் கட்சி மகாஜன சங்கமோ, வாணிய வைசியர் சங்கமோ, மருத்துவர் சங்கமோ, அருந்ததியர் சங்கமோ மற்றும், இப்படிப்பட்ட பல பல ஜாதி வகுப்புச் சங்கமோ, உள் வகுப்புச் சங்கமோ எதுவும் இனிச் சட்ட விரோதமாகக் கருதப்படும். அதனதன் தலைவர்களும் பிரமுகர்களும் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டு அவர்கள் சொத்துகளைப் பறிமுதல் செய்யப்படும்” என்று உத்திரவு போட்டு விடலாம். 

பிறகு நமக்கு என்னதான் வேண்டும். தானாகவே சமதர்மமும், பொதுவுடைமையும் தனித்தனி நாடு சுதந்திரமும் தாண்டவமாடும். 

இந்தப்படி சர்க்கார் செய்யாமல் வேறு எந்தவித முயற்சி செய்தாலும் அடுத்த பலிக்கு மந்திரிமார் உள்பட நாம் யாவரும் தயாராய் இருக்க வேண்டியதுதான். இந்த நல்ல சமயத்தில் இதைச் செய்யாமல் இந்து மகாசபை ஒழிக்கப்பட்டாலும் சரி, ராஷ்டிரிய சுயம் சேவக் சபை ஒழிக்கப்பட்டாலும் சரி, மாறுதல் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்பது நமது கல் போன்ற உறுதியாகும். 

திராவிடர் கழகத்தார் முக்கியமாக இந்த சந்தர்ப்பத்தில் தங்கள்மீது என் குற்றமும் குறையும் எவரும் கூறுவதற்கு இடமில்லாமல் அடக்கமாய், அமைதியாய் உண்மையாய், நிரபராதியாய் நடந்துகொண்டு, தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக்  கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். 

-- குடிஅரசு - தலையங்கம் - 07.02.1948


திராவிட மக்கள் எப்படிப்பட்ட நிலையிலும் அமைதியுடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். 


- ஈ.வெ.ரா 

குடிஅரசு - வேண்டுகோள் - 07.02.1948 

காந்தியார் மறைவு - பெரியார் செய்தி

 காந்தியார் மறைவு - பெரியார் செய்தி 


காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிது கூட நம்ப முடியாததாகவே இருந்தது! இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரை மறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். 



அதுவும் காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ-உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மதஇயல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்து கொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும். 

-- குடிஅரசு - அறிக்கை - 31.01.1948 

Thursday 27 January 2022

கர்ப்பத்தடை - தோழர் பெரியார்

 கர்ப்பத்தடை


குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்

ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும், பலமும், வீரமும், சுயமரியாதையும், அறிவுமுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்கள் குழந்தைப் பருவம் முதற்கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும் வளர்க்கப்பட வேண்டும். அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் சக்திக்கும் தகுதிக்கும் போதுமான அளவே குழந்தைகளைப் பெறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், சக்திக்கும், அளவுக்கும் மீறி பெற்றோர்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத்திற்குள்ளாவதுடன், குழந்தைகளும் பலவீனர்களாகவும், சௌகரிய மற்றவர்களுமாகி, அவர்களைக் கொண்ட தேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள்.



உதாரணமாக. நமது நாட்டையே எடுத்துக் கொள்ளுவோமேயானால், நாளுக்கு நாள் ஜனங்களின் எண்ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மையோர்கள் தொழிலில்லாமல், வாழ்வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அவைகளை காப்பாற்றவும், படிப்பிக்கவும் சத்தியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதும் நாம் அனுபவித்தும், பார்த்தும் வருவதுமான சம்பவங்களாகும். சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும்பங்களுக்கும், அதிகமான பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும்பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை, நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம். முதலாவது, பிள்ளைகளை அதிகமாக பெறப் பெற, பெற்றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்து கொண்டு வருகின்றன. அதுபோலவேதான், ஒரு நாடும் தனது சக்திக்கு மேற்பட்ட மக்களை உடையதாக ஆகிவிட்டால் அது சதா காலமும் பஞ்சத்தினாலும், நோயினாலும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டியதோடு, அது தன் அழகையும், முற்போக்கையும் இழந்து சுயமரியாதையையும் இழந்து தயங்க வேண்டியதாகி விடுகின்றது.

இந்த உண்மையை அறியாமலே இதுவரை அனேக சமூக சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும், பொருளாதார சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும் தங்கள் நாட்டின் மக்கள் சமூகத்தின் முற்போக்கிற்கும், பொருளாதார முற்போக்கிற்கும், வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக, ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டு மக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதாகாலமும் பிறர் மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள். நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமைப்பட வேண்டியவர்களாகவும், மற்றவர்களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள்.

ஆனாலும், சமீப காலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து, இவ்வித கொடுமையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று, ஜன சமூகத்தைப் அதிகப்படுத்தி விடக்கூடாது என்பதேயாகும்.

ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல்நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக்காரர்கள் பலராலும், வைத்திய நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, இத் துறைகளில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக்கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அன்றியும், இந்த தத்துவத்தை அநேக அறிஞர்கள், தங்கள் வாழ்க்கைகளில் அமுலுக்குக் கொண்டு வந்து கொண்டும் இருக்கின்றார்கள். அதாவது மேல் நாட்டார்களில் படித்தவர்கள் என்று சொல்லப்படும் கூட்டத்தார்களிலேயே, அநேகர் கர்ப்பம் தரிக்காமல் இருக்கத்தக்க பல உபாயங்களைக் கையாண்டு வருகின்றார்கள். இதற்காகப் பல சாதனங்களையும் கண்டுபிடித்து, பொது ஜனங்களுக்கு அறிவித்து, சில சாதனங்களை வினியோகித்தும் வருகின்றார்கள். ஆனால், சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங்களும் இதன் உண்மைத் தன்மையை உணரவோ, பயன் அடைய முடியாமலோ இருந்து வருகிறார்கள்.

உண்மையிலேயே, இம் மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் - கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள். ஆனால், இவர்களோ இம் மாதிரியான, அதாவது கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரியங்களைப் பற்றிப் பேசுவது கூட நாகரீக விரோதமான பேச்சென்று கருதுகிறார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும், மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும், இதை மத விரோதமானதென்றும், பாவகரமானதென்றும், கடவுள் கோபத்திற்கு இலக்கான காரியமென்றும் பேசி, இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால் ஏழை மக்களும், பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக்கின்றது என்று அறியக்கூட சௌகரியமில்லாமல் போய் விட்டது. ஆனால், மேல் நாட்டில், டாக்டர் மாரீஸ் டோப்ஸ் என்கின்ற ஒரு ஆங்கிலப் பெண் ஒருவர், தைரியமாக முன்வந்து எவ்வித பழிப்புக்கும், எதிர்பிரசாரத்திற்கும் அஞ்சாமல், இவ்விஷயத்தை, கர்ப்பத் தடையை, பிரசாரம் செய்யத் துணிந்ததின் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜமானதுமான விஷயமாய்ப் பேசிக் கொள்ளப்படும்படியாக ஆகிவிட்டது. அதுமாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப்பேற்றை தடுக்கும்படியான வசதிகள் சம்மந்தமாக, பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப் பட்டும் இருக்கின்றன. கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசை உடையவர்களுக்கு அம் மார்க்கங்களைக் கற்றுக் கொடுப்பதுடன், அதற்கு வேண்டிய சாதனங்களையும், கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்கள். மருந்து வியாபாரக்கடை முதலியவைகளில், கர்ப்பத்தடைக்கு அனுகூலமான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்திருக்கின்றார்கள்.

இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமூகச் சீர்திருத்த ஆராய்ச்சிக்காரர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதால் இதை சட்ட விரோதமென்றும் யாரும் சொல்லத் துணியவில்லை. இது எவ்விதத்திலும் சட்ட விரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணர வேண்டும். ஏனெ னில், சட்ட விரோதமான காரியமென்பதெல்லாம் அன்னியனுக்கும், தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்க கூடிய காரியங்களைத் தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ, அதிருப்தியோ ஏற்படுவதற்கில்லை.

அன்றியும், இந்த கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனைக் கலைப்பதற்காக ஏற்பட்டதல்ல. அதற்கு இந்த முறைகள் பயன்படவுமாட்டாது. அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கரைப்பது என்பது தாயின் சரீர சக்திக்கும், சில சமயங்களில் உயிருக்குமே ஆபத்தை விளைவிக்க கூடியதாயிருப்பதால் கண்டிப்பாக அந்த முறையை யாரும் கையாளக் கூடாது என்பதே நமதபிப்பிராயம்.

கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும். தேசப் பொது நன்மையையும், சமூக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டுபிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.

பெண்ணானவள் திட சரீரியாயில்லாமலும், காயாலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்திய சரீரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளை பெறுவதென்பது அவளுக்கு மிகவும் அபாயகரமானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.

உதாரணமாக, க்ஷயரோகத்தாலும் நீரழிவு வியாதியாலும், நெஞ்சு துடிதுடிப்பினாலும் பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும், கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும்.

தொத்து வியாதி, மேக சம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற்றதும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும்.

பிரசவத்தினால் சரீர மெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவ சரீரமுடையவர்கள், மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப் பெற்று, அது நன்றாகப் பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும், முதலில் கர்ப்பமாகி பிள்ளைப் பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தைக்கு சௌகரியமில்லாமல் போவதோடு மறு குழந்தையைப் பெறுவதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.

பெண்ணும் ஆணும் தகுந்த வயது அடைவதற்குமுன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக்கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்த குழந்தைகள் மிக்க இளமைப் பருவத்தின் காய்ப்பாகி உறுதியற்ற சரீரக் கட்டுடையதாகி விடும். குடும்பத்திற்கு போதிய வரும்படி இல்லாத நிலையில், பெண்கள் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் குடும்பத்திற்கு தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி விடும்.

அன்றியும், ஆண், பெண் ருது சாந்தியானவுடன் பெண் கர்ப்பமாகி விட்டால், கொஞ்ச காலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கலவி இன்பம் அடைவதற்கு சாவகாசமில்லாமல் போய் விடும்.

இவ்வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாயிருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கின்றது. என்னவெனில், பெண்களுக்கு கர்ப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணைச் சேர்ந்ததாயிருக்கின்றதே தவிர, மற்றபடி, கருப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும், பிள்ளை பெறும்போது அடையும் பிரசவ வேதனையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும் பெண்களே அடைகின்றார்கள். பிள்ளையைப் பெற்ற பின்பும், தாயானவள் தான் தனது இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.

குழந்தைக்கு வரும் வியாதிகளுக்கும் தானே பத்தியமிருக்க வேண்டியவளாகிறார். அதைச் சுமந்து, போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.

பெண்ணானவள் ஒன்று, இரண்டு பிள்ளைகளை பெற்றவுடனேயே சகலவித சுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகி விட வேண்டியவளாகிறாள்.

குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சியையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு, புருஷனுக்கும், குடும்பத்திற்கும் அடிமையாகிவிட வேண்டியவளாகிறாள். புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண்ஜாதி ஒரு புருஷனைத் தவிர வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாயிருக்கின்றது. பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்குச் சுதந்திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டுவிட நேரிடுகின்றது. சிறிதளவாவது சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இதுவரை கூறி வந்தவைகளாலும், பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத்தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.

ஆகவே, இந்த தலையங்கத்தில் கர்ப்பத்தடையின் அவசியத்தைப் பற்றி ஒருவாறு விளக்கினோம். இனி அடுத்த வியாசத்தில் அதன் உபாயங்கள் என்ன என்பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப்பிராயத்தை எடுத்து விளக்க எண்ணியுள்ளோம்.

-- (குடி அரசு - கட்டுரை - 01.03.1931)

Sunday 23 January 2022

திராவிட நாடு திராவிடருக்கே! - குடி அரசு - 17.12.1939

 

திராவிட நாடு திராவிடருக்கே! 

உங்களிலே ஆயிரத்தெட்டு ஜாதியினர் இருக்கின்றனர்; ஆயிரக்கணக்கான பாலிய மணங்கள் நடைபெற்று வருகின்றன; லட்சக்கணக்கான பாலிய விதவைகளிருக்கின்றனர்; இன்னும் பலர் வீட்டை விட்டுப் புறப்படுகையில் சகுனம் பார்த்தல், முதலிய மூடப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கடவுள் இன்னும் மானுஷீகத் தன்மையைப் பெறவில்லையென்று மேனாட்டான் சொல்லுகிறான் என்று மட்டும் சீறி விழுகிறார்களே ஒழிய உண்மையிலே இந்நாட்டில் அவைகள் இல்லையா? இல்லாததைச் சொல்லுகிறார்களா? என்று அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. யோசித்துப் பார்ப்பவர்களுக்கு அதன் உண்மை விளங்காமல் போகாது. அவர்கள் சொல்லுவதற்கு ஆதாரம் இல்லையா? நம்மவர்களில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் இல்லையா? வகுப்பு வித்தியாசம் இல்லையா? தீண்டக் கூடாது தொடக் கூடாது என்ற பாகுபாடு இல்லையா? இன்றும் அவைகளைப் பிரத்யட்சத்தில் நாம் கண்டு வருகிறோம். 



சாஸ்திரங்களிலிருப்பதைப் பார்க்கிறோம். சட்டங்களில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு வருகிறோம். இந்து முஸ்லிம், கிறிஸ்தவர், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார்,தாழ்த்தப்பட்டோர் - உயர்ந்த ஜாதியார் என்ற போராட்டம் எங்கு இல்லாமல் போயிற்று என்று கேட்கிறோம். இந்தியாவில் எந்தப் பாகத்தில் இல்லாமலிருக்கிறது என்று யாரால் சொல்ல முடியும் என்று கேட்கிறோம். அதுபோலவே பாலிய விவாகம் இந்நாட்டில் நடைபெற்று வருகின்றன என்பதை யாரால் மறுக்க முடியும், பாலிய விதவைகளின் தொகை லட்சக்கணக்கிலிருப்பதை எவரால் மறைக்க முடியும் என்று கேட்கிறோம். மூடநம்பிக்கை இல்லையென்று எவரால் துணிந்து கூற முடியும், கடவுள் மனுஷத் தன்மை பெறவில்லை என்று பகுத்தறிவுவாதி கூறுவது போலத்தானே ரால் கட்டுக் கதைகள் இன்றும் உள்ளன. 

கடல் நீரினுள் புகுந்து முத்துக்களையும், பவளங்களையும் எடுத்துவர  கருவிகளையும், நீரினுள் புகுந்து செல்லும் சப்மரீன்களையும், டார்பிடோக்களையும் இன்னும் நவீன யந்திரங்களையும் கண்டுபிடித்து வருவர்களிடம் மச்சாவதாரத்தையும், வராக அவராதத்தையும், கூர்ம அவதாரத்தையும், குறித்துச் 

சொன்னால் நகைக்காமல் என்ன செய்வார்கள் என்று கேட்கிறோம். ஆகவே இத்தகைய நாகரிகத்தையும், பழக்க வழக்கத்தையும், கலையையும், கொண்டவர் சுதந்திரத்தோடு வாழ்ந்துவிடப் போகிறார்கள்? இவர்களுக்கா சுதந்திரம் என்று எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய நாகரிகத்தையும், கலையையும், தெய்வ வழிபாட்டையும் கொண்டது எது? எச்சமுகம்? எந்நாடு? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா வெறும் ரோசம் எதற்கு? ஏக தெய்வ வழிபாட்டையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும்  தொழிலையே பிரதானமாகவும் கொண்ட கலையையும், நாகரிகத்தையும் உடைய சமூகம்,நாடு எத்தனை நாளைக்கு மேற்சொன்ன பழிச் சொற்களைத் தாங்கி நிற்கும் பயிர் நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை உடையவன் களைகளைக் களைந்தெறியப் பிரியப்பட மாட்டானா? அதற்கும் தண்ணீர் இறைத்து விட்டு இத்தனை நாள்  வளர்த்தோமே இப்பொழுது அவைகளை எப்படிக் களைந்தெறிவது என்று பயித்திக்காரனாவது எண்ணுவானா? அது போலவே, நமது கலை. நாகரிகம் பழக்க வழக்கம் ஆகியவைகளை உலகுக்கு மறைத்து வரும் களை போன்ற ஆரிய நாகரிகம்  கலை பழக்கவழக்கம் ஆகியவைகளானாலும் சரி. அவைகள் நிலை பெற்றிருக செய்யும் எந்தச் சட்டமானாலும் சரியே களைந்தெறிய வேண்டியது முதற் கடமையல்லவா என்று கேட்கிறோம். 

இவ்வெண்ணம் நம்நாட்டிலே இன்று நேற்று தோன்றியதாக யாரும் கருதி விட முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டாக்டர் டி.எம். நாயர், சா.பி. தியாகராயப் பெருமான் மனதிலும் தோன்றிவிட்டது. ஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட மக்களை, திராவிட நாட்டைக் காப்பாற்ற வேண்டும், இந்நாட்டிலிருந்து ஆரியக் களையை களைந்தெறிய வேண்டும் என்ற கருத்தின் மீது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை தோற்றுவித்தார்கள். இந்த எண்ணம் அன்று இருந்ததினாலேதான் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தார் ''திராவிடன்" என்ற பத்திரிகையை தோற்றுவித்து நடத்தி வந்தார்கள். இப்பொழுது அவ்வெண்ணம் கொழுந்து விட்டெரிகிறது. திராவிட இரத்தம் கொதிக்கிறது. அதன் காரணமாகவே சென்ற 10ஆம் தேதி நாடெங்கும் தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் ஒலித்தது. திராவிட நாட்டை தனியாகப் பிரித்துவிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தமிழருக்கே என்றால் சரித்திர அறிவோ, அரசியல் அறிவோ அற்ற ஒரு சிறு கூட்டம் பரிகாசம் பண்ணுகிறது. தமிழ்நாடு தமிழருக்கே ஆய்விட்டால் கன்னடர். ஆந்திரா கேரளர் என்னாவது என்று கேட்கின்றன அம்முண்டங்கள், தமிழ் தாய் மொழியென்றும் அதிலிருந்துதான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் பிறந்தன மொழி ஆராய்ச்சி வல்லுநர்கள் புகலுகின்றனரே. அப்படியிருக்க தமிழ் தமிழருக்கேயென்றால் அவர்களைச் சேர்ந்த குழுவினர்களாகிய கன்னடர் தெலுங்க மலையாளிகள் தனித்துப் பிரிந்துபோய் விடுவார்களா? இந்த அற்ப விஷயம் எட அந்த மர மண்டைகளில் ஏறப் போகிறது? அது ஒருநாளும் ஏறப் போவதில் என்பதையும் நாமறிவோம்.

பழைய நாகரிகத்தை ஏன் இவ்வளவு பிடிவாதமாக ஆதரிக்கிறோம் என்றால், புது  உலகு சமைப்பதற்கான திட்டங்களும், கொள்கைகளும் முறைகளும் நமது தமிழர் கலையிலும், நாகரிகத்திலும், பழக்க வழக்கத்திலும் இருப்பதினாலே ஆகும். இது அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், சமுகத் துறையிலும், சீர்குலைந்து க்ஷிணதிசையடைந்து வாழ்ந்து வருவதற்குக் காரணம் ஆரிய ஆதிக்கமேயென்று நாம்  எந்த மலையுச்சியிலிருந்தும் கூசாது கூறுவோம். சரித்திர ஆதாரங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காட்டுவோம். அறிஞர் கூற்றுகள் எத்தனை வேண்டுமானாலும் தீட்டுவோம். நம் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருப்பதற்கும் நாம் அடிமையாய் இருப்பதற்கும் பார்ப்பனியமே அதாவது, ஆரியமே காரணம் என சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். இந்நாட்டில் பார்ப்பனியம் இழைத்த கொடுமைகள் பல என தோழர் காந்தியார் பார்ப்பனிய வலையில் விழுவதற்குமுன் கூறியிருக்கிறார். ஆகவே, திராவிட நாடு முன்னேற வேண்டும் ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமிழ்நாடு தமிழருக்கே வர வேண்டும் எனக் கோருகிறார்கள்.

மற்றொரு காரணம் என்னவென்றால், ஒரு மாகாணம் மற்றொரு மாகாணத்தை எந்தவித காரணத்தினாலும் சுரண்டக் கூடாது என்பதினாலே ஆகும். இப்பொழுது நம்மாகாணம் அறிவுத்துறையிலே சிறந்து விளங்கியும், அதாவது உயர்ந்த கல்வியிலே நம்மவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாயிருந்தும், வர்த்தகம், செல்வம் ஆகிய இரு விஷயங்களிலே வடமாகாணத்துக்கு இளைத்தே இருந்து வருகிறது. வர்த்தகத்துறையிலே அதாவது அகமதாபாத் மில், கான்பூர் மில் ஆகிய ஜவுளி தினுசுகள்தான் இந்நாட்டிலே எங்கு பார்த்தாலும் பரவி வருகிறது. எந்த குக்கிராமத்தில் பார்த்தாலும் அகமதாபாத் வேஷ்டியை பார்க்கலாம். தமிழகத்தில் மட்டிலுமல்ல; திராவிட மக்கள் எங்கெங்கெல்லாம் குடியேறியிருக்கிறார்களோ அங்கெல்லாம் அகமதாபாத் வேஷ்டியைப் பார்க்கலாம். ஆனால், நமது கோவை மில் வேஷ்டியை வடநாட்டிலே எங்கேயாவது பார்க்கலாமா என்று பார்த்தால் அது குதிரைக் கொம்பாயிருக்கிறது. ரெண்டாவது, தென்னாட்டிலுள்ள செல்வம் எல்லாம் வடநாட்டிலே போய் குவிகிறது. இந்து தேச சரித்திரத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். வடநாட்டிலே எத்தனை வேற்றரசர்கள் படையெடுத்து வந்து ஒரு நாட்டு பொருளை மற்றொரு நாட்டுக்குக் கொள்ளையடித்துக் கொண்டு போனார்கள் என்பது. ஆனால், தமிழகத்தில் அம்மாதிரி நிகழ்ச்சிகள் நடந்ததாக படித்திருக்க முடியாது. அதனால்தான் மக்கள் அவ்வளவு செழிப்பாக வீரத்தோடு வாழ்ந்து வந்தார்கள் என்று அறிகிறோம். ஆனால், இன்று நம் மக்கள் நிலை என்ன? வீரம் எங்கே? என்று பார்த்தால் வடநாட்டு ஆதிக்கத்தினால் அதாவது என்று வடநாட்டிலிருந்து மார்வாடிகளும், குஜராத்திகளும் இங்கு கால் வைத்தார்களோ அன்றே அவை எல்லாம் தொலைந்தது என்பது நன்கு விளங்கும். தென்னாட்டிலுள்ள செல்வத்தை வருடந்தோறும் லட்சக்கணக்கில் வாரிச் செல்லுகின்றனர். செல்வத்தை இழந்த மக்கள் உயிர் வாழ்வதற்காக வெளிநாடு செல்கின்றனர். கடல் கடந்து உற்றார் உறவினர்களைப் பிரிந்து செல்லுகின்றனர். தோட்டங்களில் அட்டைக் கடியிலும் கொசுக்கடியிலும் உழன்று வருகின்றனர். வடநாட்டார் நமது செல்வத்தைக் கொண்டு உண்டு கொழுத்து வருகின்றனர்.

வெளிநாட்டிலும் இப்பொழுது இந்தியர்களுக்கு வேலையில்லையென்று - சொல்லித் துரத்துகிறார்கள். இனி தமிழன் எங்குப் போய் உயிர் வாழ்வான்? வாழ வழியின்றி தவிக்கின்றான். ஆகவே, தமிழன் மாள்வதா வாழ்வதா என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஆகவேதான் தமிழ்நாடு தமிழருக்கே இருக்க வேண்டும் எனக் கோருகிறான். அந்நாட்டில் அந்நியன் எவனுக்கும் ஆதிக்கமிருத்தல் கூடாதென்ற முடிவுக்கு வந்து விட்டான். இதற்காக எத்தகைய கஷ்டம் வந்தாலும் சகிக்க தமிழன் நெஞ்சம் உரம் கொண்டுவிட்டது. இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென்றே தமிழன் துணிந்து விட்டான். அதை சென்ற 10-ஆம் தேதி நிகழ்ச்சி நன்கு விளக்கி விட்டது. தமிழன் தனது "லட்சியம்'' வெற்றி பெறும் வரை அயர மாட்டான் அல்லும் பகலும் அதே சிந்தனையாயிருப்பான். தமிழன் இத்துணிச்சலைப் பெற்றிருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. இன்று உலகிலே நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்ப்பவர்களுக்கு இதில் ஒன்றும் அதிசயம் காண மாட்டார்கள் அய்ரோப்பாக் கண்டத்தில் எத்தனை சிறு நாடுகள் நமது திராவி நாட்டைவிட ஜனத் தொகையிலும், விஸ்தீரணத்திலும் எவ்வளவோ சிறிய நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன என்பதை யாவரும் அறிவர். ஏன் அவைகள் தங்கள் சுதந்திரத்திற்காக அவ்வாறு போராடுகின்றனவென்றால், அப்பொழுதுதான் தங்கள் கலை, நாகரிகம் முதலியவைகள் காப்பாற்ற முடியும் என்ற காரணத்தினாலேயாகும். அய்ரோப்பா எல்லாம் ஒன்றாய்விட்டால் மெஜாரிட்டியினர்களுடைய நாகரிகத்தைப் புகுத்தி மற்றவைகளை அழிக்கச் செய்துவிடுமென்ற அச்சம் ஒவ்வொரு நாடும் கொண்டிருப்பதினால்தான் இன்று அவ்வாறு போராடுகின்றன. ஆகவே. உலகம் போற்றும் நமது கலை, நாகரிகம் பழக்க வழக்கம் ஆகியவை வளர வேண்டுமானால் - உலகிலேயே பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் நமது நாட்டுக்கு அதாவது திராவிட நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டும். ஏற்கெனவே மாகாணங்களுக்கு சுய ஆட்சி வழங்கப்பட்டு விட்டது. இப்பொழுது நாம் கோருவதெல்லாம் நமது கலையின் மீதும், நாகரிகத்தின்மீதும், பொருளாதாரத்தின் மீதும் வேறு எந்த மாகாணமும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதேயாகும். இந்தப் பாதுகாப்பைக் கோருவதில் என்ன தப்பு என்று கேட்கிறோம். நிலம் படைத்தவன் தனது நிலத்தைச் சுற்றி அடுத்த நிலத்துக்காரனது ஆடு மாடுகள் வந்து பயிரை அழித்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக வேலி போட மாட்டானா? அப்படி அவன் வேலி போடுவது தவறா? என்று கேட்கிறோம். இது போலவேதான் நமது மாகாணத்திற்கு பந்தோபஸ்து தேடுகிறோம். இது எப்படிக் குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

எனவே, திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் திராவிடநாடு தனியாகப் பிரிக்கப்படுகிறவரை சலிக்காமல் ஒலிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அதற்கு ஆவன செய்ய ஒவ்வொரு தமிழனும் தன்னைப்  பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். 

திராவிட நாடு! திராவிடருக்கே! 


-- குடிஅரசு - தலையங்கம் - 17.12.1939 

தமிழ்நாடு தமிழருக்கே - 1939 விடுதலை தலையங்கம் - 5

 தமிழ்நாடு தமிழருக்கே

தமிழ்நாடு தமிழருக்கே என்னும் தலைப்பில் இதற்குமுன் 4 தலையங்கம் எழுதியிருக்கிறோமாக இது 5-ஆவது தலையங்கமாகும். இதில் ‘ஆரியர் சமயம்’ என்பது பற்றி எழுதுவதாக முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அதைப்பற்றி சிறிது எழுதுவோம்.




ஏன் எனில், ஆரியர்கள் இன்று ‘இந்திய’ நாட்டை எடுத்துக் கொண்டாலும் அல்லது திராவிட நாட்டை எடுத்துக்கொண்டாலும் 100-க்கு மூன்று பேர்களாக ஜனத்தொகையில் இருக்கும் ஒரு வெகு சிறுபான்மைக் கூட்டத்தாராகிய அவர்கள் (ஆரியர்) எப்படி மற்ற உண்மையான 100-க்கு 97 பேரான பெரும்பான்மைச் சமூகத்தாரையும் பெரும் பழம் வீரம் பொருந்திய அவர்களது நாட்டையும் சிறுபான்மையாக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால், ஆரியர்களது சமயமும் சமயத்தின் மூலம் ஒற்றுமையும்தான் அவர்களுக்கு அதற்கு வேண்டிய சவுகரியத்தைக் கொடுக்க ஆதாரமாய் இருந்து வந்திருக்கிறது என்பதுடன் இன்றும் இருந்து வருகிறது. ஆதலால், அதை விளக்க ஆசைப்படுகிறோம்.

ஆரியருடைய சமயம் என்ன?

ஆரியருக்குச் சமயம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்ட சாதனம் ஒன்றுமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும் என்பது ஒருபுறமிருக்க “ஆரிய சமயம் இந்துமதம்” என்று சொல்லப் படுமானாலும், இந்து மதம் என்பதற்கும் ஒரு குறிப்பிட்ட கிளிப்த்தமான கொள்கையோ ஆதாரமோ கிடையாது என்பது ஆராய்ச்சியாளர் கடைமுடிவாகும். ஆரியத் தந்திரசாலிகளும் ஆரியரல்லாதார் மீது துவேஷம் கொண்டவர்களும் அனாரியர்களை இழிவுபடுத்தியும், அடக்கியும் ஏமாற்றியும் கீழ்மைப்படுத்துவதற்கு ஆதாரமாக அவ்வப்போது சொல்லி வந்ததையும், எழுதி வந்ததையும் தொகுத்துக் கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடித் திருத்தியும், சில விஷயங் களை எடுத்தும், சில விசயங்களைப் புகுத்தியும் அமைத்துக் கொண்டிருக்கும் ஆதாரங்கள் இன்று ஆரியர்களின் சமய ஆதாரங்களாய் இருக்கின்றன. அவை பெரிதும் வேதம்,  சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம் இதிகாசம் முதலிய பெயர்களோடு இருந்தாலும், இவைகளில் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயும் ஆபாசங்களும் அசம்பாவிதங்களும் அசாத்தியங்களும் நிறைந்ததாயும், புத்திக்கும் ஆராய்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாததாயும் பெரிதும் இருந்து வருவதைக் காணலாம்.

இந்தக் காரணத்தாலேயேதான் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் அவைகளைப் படிக்கக்கூடாது என்றும், படித்தால் கொடிய தண்டனைகள் விதிக்க வேண்டும் என்றும், அவ்வாதாரங்களை எவனாவது படித்துவிட்டோ, கேட்டு விட்டோ விவகாரம் தர்க்கம் செய்வானானாலும் நம்பாவிட்டாலும் அவனை நாஸ்திகன் என்று சொல்லி அரசன் தண்டித்துச் சமுதாயத்தை விட்டும், நாட்டை விட்டும் விரட்டி அடிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட நிபந்தனைகளும் தண்டனைகளும் அதை நிறைவேற்றத்தக்க அரசர்களும் வெகு காலம் வரை இருந்து வந்ததாலேயே அப்படிப்பட்ட ஆபாச அக்கிரம அவிவேகமான அவர்களது சமய ஆதாரங்கள் திராவிட மக்களுக்குள் பரப்பப்படவும் அதனால் ஆரியர்களுக்கு மேன்மையும், செல்வாக்கும் பெருகி நிலைத்து வரவும் இடமேற்பட்டதுடன், ஆரியரல்லாத மக்கள் எவ்வளவு பண்டிதர்களானாலும் அந்த ஆரியர் சமய ஆதாரங்களைப் பிரச்சாரம் செய்வதனால் மாத்திரமே வாழ முடியும்படியாகவும் இருந்து வந்திருக்கிறது.

ஆரிய சமய ஆதாரம்

உண்மையில் ஆரியர்களின் சமய ஆதாரங்களில் பெரும்பாலும் எதைப் பார்த்தாலும் ஒரு மனிதனால் சொல்லப்பட்டதாகவோ, உற்பத்தி செய்யப்பட்டதாகவோ காண்பது முடியாததாயிருந்தும், ஒவ்வொரு ஆதாரத்துக்கும் அதன் கர்த்தா தெய்வத் தன்மை பொருந்திய வனாகவும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்த மில்லாத அற்புதச் சக்தி பெற்றவனாகவும் கற்பிக்கப்பட்டு இருப்பான்.

ஏனெனில், அப்படிக் கற்பிக்கப்பட்டதால்தான் அந்த ஆபாசப் புளுகுக் களஞ்சியங்கள் நிலை நிற்க முடியும். அப்படிக்கில்லாமல் சாதாரண மனிதனால் செய்யப்பட்டதென்றால், “அது அவனுக்கு எப்படித் தெரியும். அது எப்படி முடியும்” “அத்தனை நாட்களாய் அவன் எப்படி இருந்திருக்கமுடியும்” என்பன போன்ற கேள்விகள் பிறக்குமே என்கின்ற எண்ணத்தினால், “எழுதினவனும் சொன்னவனும் தெய்வத்தன்மை பொருந்தியவனானதால், அவனால் எழுத முடிந்தது. ஆதலால் அதைப்பற்றி யாரும் தர்க்கிக்கக்ப்படாது” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளச் சொல்லலாம். அதிலும் திருப்திப்படுவதற்கு முடியாத கஷ்டம் ஏற்படுகிற விஷயங்களாய் இருந்தால், “கடவுளே சொன்னார், அசரீரியாய்ப் பேசினார்” என்று தப்பித்துக்கொள்ள வசதியாயிருக்கும். ஆதலால் தான் ஆரிய சமய ஆதாரங்கள் முழுவதும் மனித சக்திக்கு மேம்பட்டவர்களால் சொல்லப்பட்டதாகவே அவற்றில் சொல்லப்பட்டு இருக்கும்.

புத்த மதமோ, கிறித்துவ மதமோ, இஸ்லாம் மதமோ சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அந்தப்படி இருக்காது என்பதோடு, கூடுமானவரை மானுஷீகத்திற்குட்பட்டதாகவே இருக்கும். ஒன்று இரண்டு விஷயங்களுக்குத் தெய்விகம் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவை விவரிக்கக்கூடாது என்கின்ற நிர்ப்பந்தமிருக்காது.

குறிப்பாக இஸ்லாத்தில் முகமது நபி அவர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் அவர் சொன்னவற்றிலோ, அவரது செய்கையிலோ மனிதத் தன்மைக்கு மீறிய காரியம் ஒன்றும் இருந்ததாகக் காணமுடியாது. குரான் வாக்கைக் கடவுள் உத்திரவால்தான் வெளியிடுவதாகச் சொல்லி இருக்கிறார். அது ஒரு சாதாரண விசயம். ஏனெனில், ஒரு மனிதன் தான் செய்கிற, பேசுகிற, நினைக்கிற காரியம் எல்லாம்கடவுள் செயலால்தான் என்று கருதுவது ஆஸ்திகர்களுக்குச் சர்வ சாதாரணமான காரியமேயாகும். ஆதலால், நபி பெருமான் தான் சொல்லும் விஷயங்களைக் கடவுள் அருளால் சொல்லுகிறேன் என்று சொன்னதில் அற்புதம் ஒன்றும் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. மற்றபடியும் அவர் எப்போதும் தன்னை மனுஷத்தன்மைக்கு மேம்பட்டவர் என்று சொல்லிக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆரிய சமய ஆதாரம் பூராவுமே மனுஷத்தன்மைக்கு மேற்பட்டதாகவே காணப்படும்.

புராண இதிகாசங்கள்

இவை தவிர ஆரியர்களுக்கு அவர்களது வாழ்வுக்கு வேத சாஸ்திர, ஸ்மிருதி சமய ஆதாரமென்று சொல்லிக் கொண்டாலும், அவர்களது வாழ்வுக்கு வழிகாட்டியாகவே அவைகளும் மற்றும் அவர்களது புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவைகளும் இருந்து வருகின்றன. இப்புராணங்களைத் தான் தங்களது சமய ஆதாரங்களாகக் கருதி ஆரியர்கள் நடந்து வருகிறார்கள்.
ஆரியப் புராண இதிகாசங்கள் ஒரு பெரும் சமூகத்தாரைச் சிறு சமூகத்தார் எப்படி ஏமாற்றிப் பிரித்துச் சிறுபான்மையோராக்கித் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கு ஏற்ற வரிகளேயாகும். அதைப் பின்பற்றி நடந்தே தான் இன்று ஆரியர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

எப்படி எனில், அப்புராண இதிகாசங்களில் ஒழுக்கம் இருக்காது; மானாபிமானம் இருக்காது; நாணயம் இருக்காது; எவ்வளவு இழிவான காரியத்தையும் செய்து காரியத்தைச் சாதித்துக்கொள்ள மார்க்கங்கள் இருக்கும். “பத்தியமே” கிடையாது. ஆனால், அவை மகா நீதியாகவும் நேர்மையாகவும் உத்தமோத்தம ஒழுக்கமாகவும் பாசாங்கு செய்து கொள்ளும்.
உதாரணமாக, ஆரியர்களின் காப்புக் கடவுளான அல்லது தலைவரான இந்திரனை எடுத்துக் கொள்ளுவோம். அவனிடத்தில் எங்காவது, எப்பொழுதாவது, ஏதாவது ஒரு ஒழுக்கமோ, நாணயமோ இருந்ததாகச் சொல்ல முடியுமா? மற்றும் அந்தப் பதவிக்கு வர முயற்சித்தவர்கள் எவ்வளவு அக்கிரமமான, இழிவான காரியங்கள் செய்து தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளிப்படையாய்ச் சொல்லவேண்டுமானால், பெண்டுகளை விட்டுக் காமமூட்டி ஏமாற்றச் செய்யப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் எந்த ஆரியராவது வெட்கப்படுகிறார்களா? அதற்குப் பதிலாகப் பண்டிகை அல்லவா கொண்டாடுகிறார்கள்.

ஆகவே, ஆரியர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்து; கொள்ள இப்பேர்பட்ட மற்றும் எப்படிப்பட்டவுமான காரியங்களைக் கையாளலாம் என்பதற்கு அவர்களது கடவுள்களும், அக்கடவுள்களின் கீழ்ப்பட்ட கீழ்த்தர வேலை உத்தியோகம் 49995-இல் ஆரியர்களுக்கு 1513 போக பாக்கி 48482 அடிமை சேவக உத்தியோகங்களுக்கு திராவிடர்கள் ஆளாக இருக்கவும், மேல்தர உத்தியோகம் அதாவது மாதம் 1000, 5000 சம்பளம் பெறும் அதிகார நிர்வாக உத்தியோகம் 1000-இல் 600 கிடைத்திருக்கவும் முடியுமா? இவ்வுத்தி யோகங்களைக் கொண்டு ஆரியர் வகுப்புக்கு ஆதரவு காட்டி ஆரியர்கள் அத்தனைபேரும் கீழ் நிலையிலும் ஆரியருக்கு அடிமையாகவும் இருந்திருகக முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டு முடிக்கிறோம்.

தமிழ்நாடு தமிழருக்கே!  தமிழ்நாடு தமிழருக்கே!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!


-- விடுதலை - தலையங்கம் - 25.11.1939