Sunday 30 January 2022

காந்தியாரைக் கொன்றவன் பெரிய சாதிப் பார்ப்பனன்

 பெரியார் காந்தியாரைக் கொன்றவன் பெரியசாதிப்பார்ப்பனன் 


நான் நாதுராம் வினாயக் கோட்ஸைவை பூனாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவர் முஸ்லிம்களின் பரம விரோதியாகக் காணப்பட்டார். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் பிரஜாவுரிமைகள் பறிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து அவர் தர்க்கரீதியாக என்னிடம் வாதித்தார். தோழர் கோட்ஸ் உயர்சாதிப் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். ஹிந்து ராஷ்டிரா என்ற தீவிரத் தேசியப் பத்திரிகையின் ஆசிரியருமாவார். அவரது வாதமாவது: 

"இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் எய்தப்பெற ஜின்னாவையும் முஸ்லிம் லீக்கையும் ஆதரித்து வந்தனர். இப்பொழுது அவர்கள் பாகிஸ்தான் அடைந்து விட்டார்கள். எனவே, அவர்கள் ஹிந்துஸ்தான் விட்டு வெளியேறி விட வேண்டியதுதானே முறை. தாய்நாடு பிளவுண்டதற்கு இந்து சமுதாயம் தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளப் போவது உறுதி. இந்தியா முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டு விட்டது'. 

மகாராஷ்டிரர்களின் பழங்காலக் கீர்த்தி பற்றித் தோழர் கோட்ஸ் பேசுகையில் அவரது கண்களில் வெறியுணர்ச்சி தாண்டவமாடியது. 

கோபக்கனல் பொங்க ஆத்திரக் குரலில் தோழர் கோட்ஸ் காந்தியாரைக் கொடூரமாகச் சபித்து, என்னை விட்டுப் பிரிந்தார். எதுவும் பேச எனக்கு நாவெழவில்லை. 

இவ்வாறு தோழர் தாமன்கார் என்பவர், லண்டன் “ரெய்னால்ட்ஸ் நியூஸ்” பத்திரிகையில் குறிப்பிடுகிறார். 

-- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 07.2.1948


No comments:

Post a Comment